(Akshayan) வருடா வருடம் உலக சூழல் தினம் ஜுன் 05 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இவ்வருட (2015.06.05 ) சூழல் தின நிகழ்வுகளும் சிறப்பாக கொண்டாடுவதற்கு சர்வதேச அளவிலும், நாடுகள் ரீதியாகவும் மற்றும் பல்வேறு அமைப்புக்களாலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சூழல் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் இவ்வருடத்திற்குரிய சூழல்தின வாசகமாக '7 பில்லியன் கனவு: ஒரே கிரகம்: கவனமாக பயன்படுத்துவோம் ' (Seven Billion Dreams. One Planet. Consume with
Care) என்பதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் சூழல் தின நிகழ்வுகளுக்காக இவ்வருடம் இத்தாலி நாடு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் இவ்வருட சூழல்தினமானது உலக சூழல்தின வாசகத்திற்கிணங்க 'நிலைத்து நிற்கும்; உற்பத்தித்தியும் பயன்பாடும் (Sustainable consumption and production) என்பவற்றின் மூலம் நிலைத்து நிற்கக் கூடியதாகப் பூமியைப் பாதுகாப்பது' என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுவதாக இலங்கை மத்திய சூழல் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
உலக சூழல் தினம் 2015 தேசிய
நிகழ்வு எதிர்வரும் ஜூன் 5ஆம் திகதி
காலை 9.00 மணிக்கு, மெதிரிகிரிய பொலன்னறுவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. இத்தேசிய
நிகழ்வை முன்னிட்டு மகாவலி மற்றும் சூழல்
அமைச்சானது அதன் கீழ் இயங்கும்
நிறுவனங்களுடன் இணைந்து தொடர்ச்சியாக பொலன்னறுவையில்
பல நிகழ்வுகளை இம்மாதம் முதலாம் திகதி தொடக்கம்
8ஆம் திகதி வரை ஏற்பாடு
செய்துள்ளது.
சிரமதான
நிகழ்வுகள் மரநடுகை சூழல் தொடர்பில்
விழிப்புணர்வூட்டும் கண்காட்சிகள் கிராமிய பாடசாலைகள் அபிவிருத்தி
ஆகிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் மெதிரிகிரிய வட்டதாக வளாகம் சோமாவதி
புனித பூமி ஆகிய இடங்களில்
மூலிகை தோட்டங்கள் உருவாக்கல் காடாக்கம் என்பன இடம்பெறவுள்ளன. கழிவகற்றல்
முகாமைத்துவம் தொடர்பில் இத்தினங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.
எதிர்வரும்
ஜூன் 5ஆம் 6ஆம் திகதிகளில்
மெதிரிகிரிய தேசிய பாடசாலையில் சூழல்
விருப்பு மக்களினூடாக என்ற தொனிப்பொருளில் சுற்றாடல்
கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக