கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் நடந்துள்ளது தொடர்பில் தமது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கிழக்கு மாகாணசபையின் பிரதித்தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று புதன்கிழமை கருத்து தெரிவித்த பிரதி தவிசாளர்,
கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் தற்போது மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி மூன்று மாவட்டங்களிலும் நடாத்தப்பட்டுவருகின்றது.
இந்த விளையாட்டுப்போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களின் நலன்கருதி அவர்களின் உணவு,மற்றும் குளிர்பான உட்பட மாணவர்களின் செலவுக்கு தேவையான நிதிகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளன.
ஆனால் இவ்வாறு ஒதுக்கீடுசெய்யப்படும் நிதியின் மூலம் மாணவர்களுக்கான வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லையென மாணவர்களினாலும் ஆசிரியர்களினாலும் அதிபர்களினாலும் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த நிதியானது ஒரு மாணவனுக்கு உணவு மற்றும் குளிர்பானங்கள் மற்றும் போக்குவரத்துக்கான செலவுக்காக ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளபோதிலும் சில இடங்களில் உணவு மட்டுமே வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த பணம் தொடர்பில் முறைகேடுகள் நடந்துள்ளது தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் என்னிடம் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பூரண விசாரணை நடாத்தப்படவேண்டும் என கல்வி அமைச்சரையும் உரிய அதிகாரிகளையும் கோருவதுடன் இதன்போது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் பெற்றுக்கொடுக்கப்படவேண்டும்.
மாணவர்களில் பலர் இன்றும் வறிய நிலையிலேயே இருந்துவருகின்றனர்.அவர்களின் தன்மையினைக்கருத்தில்கொண்டே மாணவர்களுக்கான நிதியினை அரசாங்கம் ஒதுக்கீடுசெய்கின்றது.அந்த நிதியானது மோசடிசெய்யப்படுமானால் அது மாணவர்களுக்கும் கல்விச்சமூகத்துக்கும் செய்யும் மாபெரும் துரோகமாகவே நோக்கப்படவேண்டும்.
கடந்த காலத்தில் கல்வி உட்பட பல்வேறு துறைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் மோசடி செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதை தொடர்ந்து அதனை கண்டுபிடித்து குற்றவாளிகளுக்கு எதிரான தண்டனையினை வழங்குவதில் புதிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.
அவ்வாறான நிலையில் இன்றும் இவ்வாறான மோடிகள் நடைபெறுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.இவ்வாறான நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்.
இது தொடர்பில் கல்வி அமைச்சர் தீவிர விசாரணை நடாத்து உரியவர்களுக்கு எதிராக நடவடிக்கையினை எடுப்பார் என எதிர்பார்க்கின்றேன் என்றார்.
இது தொடர்பில் இன்று புதன்கிழமை கருத்து தெரிவித்த பிரதி தவிசாளர்,
கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் தற்போது மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி மூன்று மாவட்டங்களிலும் நடாத்தப்பட்டுவருகின்றது.
இந்த விளையாட்டுப்போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களின் நலன்கருதி அவர்களின் உணவு,மற்றும் குளிர்பான உட்பட மாணவர்களின் செலவுக்கு தேவையான நிதிகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளன.
ஆனால் இவ்வாறு ஒதுக்கீடுசெய்யப்படும் நிதியின் மூலம் மாணவர்களுக்கான வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லையென மாணவர்களினாலும் ஆசிரியர்களினாலும் அதிபர்களினாலும் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த நிதியானது ஒரு மாணவனுக்கு உணவு மற்றும் குளிர்பானங்கள் மற்றும் போக்குவரத்துக்கான செலவுக்காக ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளபோதிலும் சில இடங்களில் உணவு மட்டுமே வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த பணம் தொடர்பில் முறைகேடுகள் நடந்துள்ளது தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் என்னிடம் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பூரண விசாரணை நடாத்தப்படவேண்டும் என கல்வி அமைச்சரையும் உரிய அதிகாரிகளையும் கோருவதுடன் இதன்போது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் பெற்றுக்கொடுக்கப்படவேண்டும்.
மாணவர்களில் பலர் இன்றும் வறிய நிலையிலேயே இருந்துவருகின்றனர்.அவர்களின் தன்மையினைக்கருத்தில்கொண்டே மாணவர்களுக்கான நிதியினை அரசாங்கம் ஒதுக்கீடுசெய்கின்றது.அந்த நிதியானது மோசடிசெய்யப்படுமானால் அது மாணவர்களுக்கும் கல்விச்சமூகத்துக்கும் செய்யும் மாபெரும் துரோகமாகவே நோக்கப்படவேண்டும்.
கடந்த காலத்தில் கல்வி உட்பட பல்வேறு துறைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் மோசடி செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதை தொடர்ந்து அதனை கண்டுபிடித்து குற்றவாளிகளுக்கு எதிரான தண்டனையினை வழங்குவதில் புதிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.
அவ்வாறான நிலையில் இன்றும் இவ்வாறான மோடிகள் நடைபெறுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.இவ்வாறான நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்.
இது தொடர்பில் கல்வி அமைச்சர் தீவிர விசாரணை நடாத்து உரியவர்களுக்கு எதிராக நடவடிக்கையினை எடுப்பார் என எதிர்பார்க்கின்றேன் என்றார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக