கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவக மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் நேற்று(05.06.2015) வெள்ளிக்கிழமை நண்பகல் இடம் பெற்றுள்ளதாக குற்றங்களை கண்டறியும் பொலிஸ் பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி ஐ.பி.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
களுதாவளை மாவடி வீதியைச்சோந்த 25 வயதுடைய குணரத்தினம் வதனா என்ற மாணவியே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலாமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக