வியாழன், 4 ஜூன், 2015

வாழைச்சேனையில் தமிழர்களின் காணி அபகரிப்பை தடுத்த நிறுத்தக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீராவோடை  பிரதேச தமிழ் மக்கள் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .


மட்டக்களப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீராவோடை  பிரதேச மக்களின்  காணிகளை சில  அரசியல் வாதிகளினால் கையகப்படுத்தப்பட்டு ,  பிறமாவட்டங்களில் இருந்து மக்களை வரவழைக்கப்பட்டு இக்காணிகளை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் , இதனை மாவட்ட  அரசாங்க அதிபர் தலையிட்டு தடுத்து நிறுத்தி  தங்களது காணிகளை  மீட்டு தருமாறும் இன்று ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்து மாவட்ட செயலகத்திற்கு முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

இதன் போது அவ்விடத்திற்கு வருகை தந்த மாவட்ட அரசாங்க அதிபர் பி .எஸ். எம் .சார்ல்ஸ் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்டதன் பின், இக்காணிகள்  தொடர்பாக இதற்கு முன் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால்  இக்காணிகள்  தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே இக்காணிகள்  சம்பந்தமாக எதுவித நடவடிக்கைகளும் தம்மால் மேற்கொள்ள முடியாது எனவும் , நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை அக்காணிகளுக்கான பொலிஸ் பாதுகாப்பு கொடுப்படுவதாக  ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு தெரிவித்தார் .

அதன் பின் ஆர்பாட்ட காரர்கள் கோசங்களை எழுப்பியவாறு அவ்விடத்தில் இருந்து கலைந்து சென்றனர் .









Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate