வியாழன், 3 செப்டம்பர், 2015

வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான மோட்டார்சைக்கிள் வழங்கலில் உத்தியோகத்தர்கள் பாதிப்பு

கடந்த வருடம் நாடுபூராகவும் அரசு அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான மோட்டார் சைக்கிள்களை சலுகை அடிப்படையில் வழங்கும் திட்டத் நடைமுறைப்படுத்தி இருந்தது அந்த வகையில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்திட்டத்தின் ஊடாக உள்வாங்கப்பட்ட ஆண் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்ட போதிலும் பெண் வெளிக்கள உத்தியோகத்தர்கள் அதற்கான பணத்தை செலுத்தி ஒரு வருடத்தை அண்மித்திருக்கும் நிலையில் ஒரு பகுதி பெண் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மட்டுமே மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளமையால் ஏனைய பெண் வெளிக்கள உத்தியோகத்தத்கள் தாம் புறக்கணிக்கப்பட்டு;ள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் பெரும்பாலான பெண் உத்தியோகத்தர்கள் வங்கிக்கடன் பெற்றும் தமது தங்க நகைகளை அடகுவைத்தும் இப்பணத்தை செலுத்தி உ;ள்ளனர் என்பது குறிப்பிடதக்கதாகும்.

இது தொடர்பாக தாம் பலமுறை  பிரதேச செயலாளர் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் இதுவரை தமக்கு ஆக்கபூர்வமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என விசனம் தெரிவிக்கின்றனர்.



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate