மட்டக்களப்பு சுற்றுலா துறை உரிமையாளர் சங்கமும், மியானி தொழில் நுட்ப பயிற்சி நிறுவனமும் இதற்கு நிதி உதவி வழங்குகின்ற கனேடிய உலக பல்கலைக்கழகச் சேவை (வூஸ்க்) நிறுவனமும் இணைந்து மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளை உல்லாசத் துறையில் தொழில் வழங்குகின்றவர்களுடைய சந்தைக்கேற்ப தொழிற்பயிற்சியை வழங்கி அவர்களுக்கு தொழிலைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் முதற் கட்டமாக 22 இளைஞர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கான உணவு பரிமாறுபவர் பாட நெறி இன்று காலை 10.00 மணியளவில் மியானி தொழிற்பயிற்சி நிலையத்தில் அதனுடைய அருட் தந்தை கிருதயராசு வெண்டி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாணவர்களுடைய பெற்றோர்களும் மற்றும் சுற்றுலா துறை உரிமையாளர் சங்கம் சார்பில் திரு. தர்சன் (முகாமைத்துவப் பணிப்பாளர் – றிவேறா) திரு. விஜய் (பாசிக்குடாவில் அமைந்துள்ள நிருமா சடோ வின் உரிமையாளர்) மற்றும் வூஸ்க் நிறுவனத்தின் கிழக்கு மாகாண நிகழ்ச்சித்திட்டத்திற்கு பொறுப்பாக இருக்கின்ற திரு.யோகேஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பாக பணியாற்றுகின்ற சிரேஸ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்களான திரு.ஜெயகுமார், திருமதி கவிதா அருணகிரிநாதன், திரு யேசுசகாயம் ஆகியோரும் கலந்து கொண்டதுடன். மியானி தொழிற்பயிற்சி நிலையத்தின் வளவாளரான திரு ரத்னாயக்கா அவர்களும் ஏனைய முதன்மை நிலைப்பயிற்சிக்குப் பொறுப்பாக இருக்கின்ற ஆசிரியை திருமதி ஜெசி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் 98 இளைஞர் யுவதிகளை இனங்கண்டு அவர்களுக்காக சமையல் பணியாளர், வரவேற்பாளர்,விடுதி ஊழியன் மற்றும் உணவு பரிமாறுபவர் போன்ற தொழில்வாய்ப்பினூடான பயிற்சிகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. எமது மாவட்டதிலுள்ள ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகள் தங்களுடைய விண்ணப்பங்களை பின்வரும் விலாசத்திற்கு அனுப்பி மேற்படி பயிற்சியில் இணைந்து கொள்ளலாம். சுற்றுலா துறை உரிமையாளர் சங்கம் நடாத்துகின்ற நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியான இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக