நல்லாட்சிக்கான அரசைத் தெரிவு செய்வதற்கானதொரு அரிய சந்தர்ப்பம் மீண்டும் பொதுமக்களின் கைகளுக்கு வந்துள்ளது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு முன்னாள் இணைப்பாளர். ஆர். மனோகரன் தெரிவித்தார...
வெள்ளி, 31 ஜூலை, 2015
தீர்வுத்திட்டம் எதனையும் பெரும்பான்மைக்கட்சிகள் கொண்டிருக்கவில்லை –ஜனா
இனப்பிரச்சினை தொடர்பாக எத்தகைய தெளிவான தீர்வுத்திட்டங்கள் எதையுமே பெரும்பான்மைக்கட்சிகள் தமது தேர்தல் வஞ்ஞாபனத்தில் தெளிவாக முன்வைக்கவில்லை. இது தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துக் கூறவில்லை என்பதை விட சிங்கள மக்கள் மத்தியில் கூறவிரும்பவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார...
மட்டக்களப்பில் உதைபந்தாட்டம் பின்தங்கிய நிலையில் செல்கின்றது –பிரதிக்கல்வி பணிப்பாளர் லவகுமார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உதைபந்தாட்டத்துறை மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றுகொண்டுள்ளதாக மட்டக்களப்பு வலய பிரதி உடற்கல்வி பணிப்பாளர் வி.லவகுமார் தெரிவித்தார...
தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி ஏற்பாட்டில் அப்துல்கலாமுக்கு அஞ்சலி செய்யும் நிகழ்வு
இஸ்லாமியராக இருந்தபோதிலும் தன்னை ஒரு தமிழனாக மட்டுமே அடையாளப்படுத்திக்கொண்ட உலகம்போற்றும் நபரான மறைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றத...
வியாழன், 30 ஜூலை, 2015
மட்டு - முறக்கொட்டான்சேனை தேவாபுரம் நாககன்னி ஆலயத்தில் நடைபெற்ற பாற்குடபவனி
(கிரான் விஜிகரன்) முறக்கொட்டான்சேனை தேவாபுரம் ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்வசத்தினை முன்னிட்டு நான்காம் நாளாகிய இன்று (30) வியாழக்கிழமை பாற்குட பவனி நிகழ்வு நடைபெற்றது.
முறக்கொட்டான்சேனை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை மற்றும் ஆராதனையை தொடர்ந்து பக்தர்கள் புடைசூழ பாற்குட பவனியானது ஊர்வலமாக முறக்கொட்டான்சேனை சேர்மன் வீதியூடாக அம்மனின் ஆலயத்திற்கு வருகைதந்ததும் ஆலயத்தின் நித்திய பூசகர் கந்தன் இளையதம்பி...
பின்தங்கிய கல்வி வலய உயர்தர மாணவர்களுக்கு துர்க்கா அச்சகத்தினால் இலவச கருத்தரங்கு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதி மாணவர்களின் நன்மை கருதி மட்டக்களப்பு,கொக்குவில் துக்கா அச்சகத்தினால் இலவச கருத்தரங்கு நடாத்தப்பட்டத...
புதன், 29 ஜூலை, 2015
கிழக்கு கல்வி அமைச்சுக்கு சொந்தமான வாகனம் தீயினால் சேதம்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்று தீயினால் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை 04.30 அளவில் திருகோணமலை - சிவன்கோயிலடியில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ அணைப்பு வீரர்கள் சென்று நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இது குறித்த மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிசார் மேற்கொண்டு...
ஐமசுகூ.வில் இணைந்தார் சிவகீதா பிரபாகரன்

மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் மேயரும், பீல் மாஸ்டர் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான சிவகீதா பிரபாகரன் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டார். கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் முன்னிலையில் இவர் கூட்டமைப்பில் இணைந்தார். இவருடன் மட்டக்களப்பு மாநகர சபையின் ஐந்து முன்னாள் உறுப்பினர்களும் கைகோர்த்துள்ளனர்.&nb...
கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான இலவசக் கல்வி கருத்தரங்கு

(கிரான் விஜிகரன்) கிழக்குப் பல்கலைக்கழக லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் கா.பொ.த உயர்தர பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களை தயார் செய்யும் நோக்கோடு பல்கலைக்கழக லயன்ஸ் கழகத்தினால்; கல்வி கருத்தரங்கானது 21, 22ம் தினங்களில் கிழக்குப்பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் வளவாளர்களாக தமிழ் துறை பேராசிரியர் எஸ்.யோகராஜா, இந்த நாகரீகத் துறை தலைவி திருமதி சாந்தி கேசவன், சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ்.முகுந்தன், விரிவுரையாளர் வாமன் மற்றும் கிழக்குப்...
செவ்வாய், 28 ஜூலை, 2015
மாமாங்கத்தில் முச்சக்கர வண்டி இனந்தெரியாதோரால் தீக்கிரை
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் பகுதியில் உள்ள வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளத...
திங்கள், 27 ஜூலை, 2015
குகனேசன் உள்ளிட்ட 8 பேரின் படுகொலையுடன் தொடர்புபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி

2004.07.2015ம் திகதி கொட்டாவையில் நித்திரைத் தூக்கத்தில் வைத்துபடுகொலைசெய்யப்பட்டதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் குகனேசன் உள்ளிட்ட 08 பேர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்படவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளத...
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் இரு முச்சக்கர வண்டிகள் விபத்து –ஒருவர் படுகாயம்
மட்டக்களப்பு நகரில் இன்று பிற்பகல் இரண்டு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார...
மட்டக்களப்பில் தங்கத்துரை மற்றும் குட்டிமணியின் நினைவுதினம் அனுஸ்டிப்பு
83ஆம் ஆண்டு கறுப்பு ஜுலையின்போது வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணியின் நினைவுதினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அனுஸ்டிக்கப்பட்டத...
இலங்கையினை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும்போதைப்பொருள் பாவனை –டாக்டர் அருளானந்தம்
இலங்கையின் மிக முக்கிய அழிவுப்பாதையினை ஏற்படுத்துவதாக போதைப்பொருள் பாவனை இருந்துவருவதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணருமான டாக்டர் கே.அருளானந்தம் தெரிவித்தார...
பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் போதையொழிப்பு மாத நிகழ்வு
போதையற்ற நாட்டை கட்டியெழுப்புவோம் என்னும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ:வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற...
அரசையூர் பகியின் “முதல் மழை” கவிதை நூல் வெளியீட்டு விழா
அரசையூர் பகியின் “முதல் மழை” கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை காலை காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில்; நடைபெறத...
ஞாயிறு, 26 ஜூலை, 2015
பாராளுமன்ற கதிரைக்கு அனுப்புவதற்கு உருவாக்கப்பட்டதல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிலரை பாராளுமன்ற கதிரைகளுக்கு அனுப்புவதற்காகவோ, சிலரது பொருளாதார வளத்தை மேம்படுத்துவதற்காகவோ உருவாக்கப்பட்டதல்ல என மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார...
மட்டக்களப்பு நகர் மற்றும் காத்தான்குடியில் சடலங்கள் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு பொலிஸ் பிரிவுகளில் இரு ஆண்களின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர...
மீன் பிடிப்படகின் வெளியிணை இழுவை இயந்திரம் திருட்டு (ஏறாவூர் – சவுக்கடி கடற்கரையில் சம்பவம் )

ஆழ் கடல் மீன்பிடிப் படகின் வெளியி ணை இயந்திரமொன்று திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, ஏறாவூர்- சவுக்கடிக் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் படகொன்றின் வெளியிணை இழு வை இயந்திரம் திருடப்பட்டுள்ளது. வழமைபோன்று புதன்கிழமை ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டு விட்டு படகைக் கரையொதுக்கி...
முறக்கொட்டான்சேனை தேவாபுரம் நாககன்னி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

(கலைச்செல்வன்)
மட்டு நகரின் வடக்கே அமைந்துள்ள முறக்கொட்டான்சேனை ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயத்தின் 21வது வருடாந்த அலங்கார உற்சவ திருச்சடங்கு எதிர்வரும் திங்கள் கிழமை (27) ஆரம்பமாகவுள்ளது.
அன்னையவளின் ஆலயத்தின் முதல் நாளன்று தெய்வீக சித்தம் கூடிய சுப வேளையில் பிற்பகல் 4.30 மணிக்கு விநாயக பெருமானுக்கு விடேச அபிசேக ஆராதனை இடம்பெற்றதும் திருக்கும்பம் எழுந்தருளச் செய்து 21வது ஆண்டுக்கான வருடாந்த திருச்சடங்குக்குரிய திருக்கதவு திறந்தலுடன் ஆரம்பமாக இருக்கின்றது.
ஆலயத்திற்கு...
அஞ்சல் திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர்களின் விடுமுறை இரத்து

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அஞ்சல் திணைக்கள சேவையாளர்களின் விடுமுறை 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி திங்கட்கிழமை வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் டீ.எல்.பி.ஆர்.அபயரத்ன தெரிவித்தார்.&nb...
29ம் திகதி முதல் பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை
வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு பிரத்தியேக வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் போன்றவற்றை நடாத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் 29 ம் திகதி நள்ளிரவு முதல் இந்த தடை அமுலாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனுடன் பரீட்சைக்கான மாதிரி வினாக்கள் மற்றும் விடைகள் அச்சிடுதல் மற்றும் அவற்றை விநியோகித்தல் கையேடுகள் அச்சிடுதல் மற்றும் அதனை விநியோகித்தல் போன்றவற்றிற்கும்...
சனி, 25 ஜூலை, 2015
சித்தாண்டி சுயேட்சைக்குழு இரா. சம்பந்தனுடன் தீடீர் சந்திப்பு - தமிழரசு கட்சிக்கு ஆதரவு!
(கிரான் விஜிகரன்) மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தில் மாட்டுவண்டி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு தனது ஆதரவை இலங்கை தமிழரசுக்கட்சிக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளது
இன்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களை திருகோணமலையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்த குறித்த சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் காலத்தின் தேவைகருதி தமிழினத்தின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக தாங்கள் தமிழரசுக் கட்சியை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர்
இது...
தமிழர்களின் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் தேசியத்தினை பலப்படுத்தமுடியும் -அமல்

(கிரான் விஜிகரன்) தமிழ் மக்களின் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்துவதன் ஊடாக தமிழ் தேசியத்தினை பலப்படுத்தமுடியும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புவதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் சி.வியாளேந்திரன்(எஸ்.எஸ்.அமல்)தெரிவித்தார்.
வாகரை பால்சேனையில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தமிழர்களின் போராட்டங்கள்...
சித்தாண்டிக்கு எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் வேட்பாளர் வழங்கப்படும் - சம்பந்தன் வாக்குறுதி
(கிரான் விஜிகரன்) மட்டக்களப்பு சித்தாண்டி மக்களின் வேட்பாளர் தொடர்பான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அந்தக்கோரிக்கையை எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் நிறைவேற்றுவதற்கு எமது கட்சி வாய்ப்பளிக்குமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களை திருகோணமலையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்த சித்தாண்டி அவர்களது கோரிக்கை தொடர்பாகவும் அதன்பின்னர் ஏற்பட்ட...
வெள்ளி, 24 ஜூலை, 2015
வவுணதீவில் பாடசாலை நீர் அருந்திய ஆறு மாணவர்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் அமைந்துள்ள வவுணதீவில் உள்ள பாடசாலையொன்றில் குழாய்க்கிணற்று நீரைப் பருகிய 06 மாணவிகள் சுகவீனமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டனர...
இங்குள்ள பிரச்சினைகளுக்கு மூல காரணம் இங்குள்ள தலைவர்கள் -ஐ.தே.க.வேட்பாளர் கணேசமூர்த்தி

இனங்களுக்கிடையே பிரச்சனைகளை உருவாக்கும் ஒரு அரசியல்வாதி நல்ல தலைவனாக இருக்க முடியாது. இங்குள்ள பிரச்சனைகளுக்கெல்லாம் மூல காரணங்கள் இங்கு இருந்த தலைவர்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் பிரதியமைச்சர் சோ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார...
கல்வித் துறையில் இருந்து அரசியல் துறைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளேன் - த.தே.கூட்டமைப்பு வேட்பாளர் ஸ்ரீநேசன்

கல்வித்துறையில் இருந்து அரசியல் துறைக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளேன் முப்பது வருடம் கல்வித் துறையில் இதயசுத்தியுடன் கறைபடியாத கரங்களுடன் சேவை செய்துள்ளேன் அரசியல் துறையிலும் அவ்வாறு இதயசுத்தியுடனும் சுத்தமான கையுடனும் நேர்மையாக நேர்மையாக அரசியல் செய்து மக்களுக்கு உதவவேண்டும் என நினைக்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடும் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்...
நாம் திராவிடர் கட்சியால் மட்டக்களப்பில் கறுப்பு ஜுலை நினைவுதினம் அனுஸ்டிப்பு
கறுப்பு ஜுலை தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் நாம்திராவிடர் கட்சி ஏற்பாடுசெய்த நிகழ்வு நேற்று பிற்பகல் நடைபெற்றத...
அவதூறான பிரசாரங்கள் குறித்து ஜனாவிடம் தேர்தல் கண்காணிப்புக் குழு விசாரணை
பாடசாலை அதிபரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாகவும், சக வேட்பாளர் சீ. யோகேஸ்வரன் அவர்களது ஆதரவாளர்களுக்கும் கோவிந்தன் கருணாகரத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் வெளியான தகவல்கள் குறித்து கோவிந்தன் கருணாகரம் (ஜனா) விடம் தேர்தல் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் வினவியுள்ளர...
அலங்காரரூபன் தென்மோடிக் கூத்து கிழக்கு பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றம்

திறந்த வெளிக்குரிய கூத்தரங்கு மனிதரின் வாழ்தலைத் தன்னகத்தே கொண்ட கலைவடிவமாகும். இது வட்டக் களரியில் உருவாக்கப்பட்டு வடிவம் பெறுவது. ஒவ்வொரு தடவையும் களரி அடிக்கும் போது அந்த வெளியில் சமுதாயம் ஒண்றிணையும். வாழும். நுண்கலைத்துறையில் 2012களின் பின்னர் அதன் இயல்பான வெளியில் நின்றே கூத்து கற்பிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு கற்றல் - கற்பித்தல் மூலம் திறந்த வெளியில் உருவானதே அலங்காரரூபன் தென்மோடிக் கூத்தாகும...
வியாழன், 23 ஜூலை, 2015
கிரான்குளத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளரிடையே கைகலப்பு -மூன்று ஆசிரியர்கள் காயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டம் ஒன்றில் இடம்பெற்ற கைகலப்பில் மூவர் காயமடைந்து காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர...
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு விஜயம்
மட்டக்களப்புக்கு விஜயம் செய்த இலங்கை மற்றும் மலேசியாவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேமஸ் டொரிஸ் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ளஸை சந்தித்துக் கலந்துரையாடினார...
தபால்மூல வாக்களிப்பிற்கான வாக்கட்டைகள் அச்சிடும் பணிகள் நிறைவு

பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தபால்மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்கட்டைகள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
அச்சிடப்பட்ட அனைத்து தபால் மூலம் வாக்காளர்களின் வாக்கட்டைகளும் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் காமினி பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய உத்தியோகபூர்வ வாக்கட்டைகள் அனைத்தும் விரைவாக அச்சிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை கிடைத்துள்ள விண்ணப்பங்களின் பிரகாரம்...
தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் தேற்றாத்தீவு கிராம மக்களின் திருவிழாவும்

இலங்கையின்
மிக பழமை வாய்த முருகன் ஆலயங்களில் ஒன்றான தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம்
கடந்த 11.07.2015 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.அந்த
வகையில் நேற்று (22.07.2015) புதன்கிழமை திருவிழாவினை குருக்கள்மடம், செட்டிபாளையம், மாங்காடு, தேற்றாத்தீவு,களுதாவளை
மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய ஆறு கிராம மக்கள் ஒன்று இணைந்து திருவிழாவினை நடாத்தினர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் புகழ் பெற்ற கலைகழகங்களில் ஒன்றான...