வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

இருதயபுரம் குமாரத்தன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு,இருதயபுரம் அருள்மிகு ஸ்ரீகுமாரத்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.


மிகவும் பண்டைய ஆலயங்களுல் ஒன்றாக காணப்படும் இந்த முருகன் ஆலயம் வேடுவர்களினால் பண்டைய காலத்தில் வழிபட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.

பத்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் ஸ்தம்ப பூஜை,வசந்த மண்டபபூஜை,சுவாமி உள்வீதியுலா,வெளிவீதியுலா என்பன நடைபெறவுள்ளது.

நேற்று காலை விநாயகர் வழிபாடுகளுடன் உற்சவம் ஆரம்பமானதுடன் விசேட ஹோமபூஜை,கும்ப பூஜை,அபிசேக ஆராதனைகளும் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டு கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

வசந்த மண்டப பூஜையினைத்தொடர்ந்து தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டு கொடியேற்றம் நாத,வேத,கீதங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசத்துடன் கொடியேற்றம் நிகழ்த்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தம்பத்திற்கு விசேட அபிசேகம் செய்யப்பட்டு பூஜைகளும் நடாத்தப்பட்டன.

எதிர்வரும் 28ஆம் திகதி ஆலயத்தின் தேர்த் திருவிழா நடைபெறவுள்ளதுடன் 29ஆம் திகதி மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக்கேணியில் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.












































Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624950

Translate