பாராளுமன்ற பொதுத்தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலையில் இருந்துவருகின்றது.
தற்போது தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் நடைபெற்றுவருகின்றது.
இதுவரை கிடைக்கப்பெற்ற உத்தியோகபூர்வமற்ற தகவலின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முதல் இடத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் இரண்டாம் இடத்திலும் மூன்றாம் இடத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பும் நான்காம் இடத்தில் ஐக்கிய தேசிய கட்சியும் உள்ளது.
இதனடிப்படையில் த.தே.கூட்டமைப்பு 6056,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1390,ஐக்கிய தேசிய கட்சி 1101,ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு 708 வாக்குகளும் பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015
Home »
» பாராளுமன்ற பொதுத்தேர்தல் - தபால் மூல வாக்களிப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலை
0 facebook-blogger:
கருத்துரையிடுக