மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள வம்மியடி ஊற்று 40ஆம் கட்டைக் கிராமத்தில் கோடரியால் கொத்தப்பட்டு படுகாயங்களுடன் கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிவயோகராசா தனுஜன் (வயது 17) என்ற இளைஞன் ஞாயிறன்று மரணமடைந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் அங்கு கிடைத்த பலாப்பழம் ஒன்றை வெட்டிப் பகிர்ந்து கொள்வதற்காக அங்கிருந்த அரிவாள் ஒன்றை எடுத்து பலாப்பழத்தை வெட்டிச் சாப்பிட்டுள்ளனர்.
தனக்குத் தெரியாமல் தனது அரிவாளை எடுத்துப் பயன்படுத்தியதால் ஆத்திரமுற்ற வடிவேல் கோகுலன் (வயது 33) என்ற அந்த நபர் சில நாட்களுக்குப் பின்னர் காத்திருந்து பழிவாங்கும் நோக்கத்துடன் மேற்படி இளைஞனை வழிமறித்து கோடரியால் கொத்தியுள்ளார்.
பின்னர் கோடரியுடன் சென்று பொலிஸில் சரணடைந்துள்ளார்.
படுகாயமடைந்த இளைஞன் கண்டி போதனா வைத்தியசாலையில் கடந்த 73 தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிறன்று மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் வருகின்றனர்.
விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் அங்கு கிடைத்த பலாப்பழம் ஒன்றை வெட்டிப் பகிர்ந்து கொள்வதற்காக அங்கிருந்த அரிவாள் ஒன்றை எடுத்து பலாப்பழத்தை வெட்டிச் சாப்பிட்டுள்ளனர்.
தனக்குத் தெரியாமல் தனது அரிவாளை எடுத்துப் பயன்படுத்தியதால் ஆத்திரமுற்ற வடிவேல் கோகுலன் (வயது 33) என்ற அந்த நபர் சில நாட்களுக்குப் பின்னர் காத்திருந்து பழிவாங்கும் நோக்கத்துடன் மேற்படி இளைஞனை வழிமறித்து கோடரியால் கொத்தியுள்ளார்.
பின்னர் கோடரியுடன் சென்று பொலிஸில் சரணடைந்துள்ளார்.
படுகாயமடைந்த இளைஞன் கண்டி போதனா வைத்தியசாலையில் கடந்த 73 தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிறன்று மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் வருகின்றனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக