திங்கள், 24 ஆகஸ்ட், 2015

களுவன்கேணியில் கஞ்சா விற்பனை செய்த குடும்பஸ்தர் கைது

தெருவில் வைத்து கஞ்சா விற்பனை செய்த குடும்பஸ்தர் ஒருவரை ஞாயிறு மாலை தாம் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரரிவித்தனர்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணியிலேயே கஞ்சா விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தளயசிங்கம் மாணிக்கம் (வயது 45) என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 3850 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பபெற்ற தகவலின் அடிப்படையிலேயே களுவன்கேணி தெருவில் வைத்து கஞ்சா விற்பனை செய்த நபரைத் தாம் கைது செய்ததாகவும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.

சந்தேக நபரை நீதி மன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624933

Translate