ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

குழந்தை யேசு ஆலயத்தின் திருவிழா சிறப்பாக நடைபெற்றது

மட்டக்களப்பு, எல்லைவீதி, திசவீரசிங்க சதுக்கத்தில் தாண்டவன்வெளி, தூய காணிக்கை அன்னை ஆலய பங்கின்கீழ் அமைந்துள்ள குழந்தை இயேசு சிற்றாலய திருவிழாவானது 30.08.2015 அன்று சிறப்பாக நடைபெற்றது.



மட்டக்களப்பு மறைமாவட்ட நிதிப்பொறுப்பாளர் அருட்தந்தை.இக்னேஸ் ஜோசப் அடிகளார் தலைமையில் பங்குத்தந்தை.அருட்தந்தை.அலக்ஸ் றொபட் அடிகளாரும் இணைந்து திருவிழா திருப்பலியினை ஒப்புக்கொடுத்தனர். 28ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

முதல்நாள் நவநாளினை மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை.ஏ.தேவதாசன் அடிகளார் தலைமையில் தாண்டவன்வெளி இறைமக்கள் சிறப்பித்தனர்.

இரண்டாம் நாள் மாலை திருச்சொரூபப்பவனி திசவீரசிங்க குறுக்குவீதிகளில் நடைபெற்று இறுதியில் நற்கருணை வழிபாடும் ஆசீரும் இடம்பெற்றது.
இதனை தேற்றாத்தீவு தெய்வீக குணமளிக்கும் இயேசு சபை அருட்தந்தை.நிர்மல் அடிகளார் நிறைவேற்றினார்.

திருவிழா திருப்பலி நிறைவில் குழந்தை இயேசு திருச்.சொரூப ஆசீருடன் கொடியிறக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. வருகை தந்தோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
























Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate