வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

மட்டு வலையிறவு பாலத்தில் விபத்து- இளைஞன் பலி- மக்கள் பாலத்தை மறித்து ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலையிறவு பாலத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததை 
பொதுமக்கள் பாலத்தினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
விபத்து தொடர்பில் பொலிஸார் பக்கச்சார்பாக நடந்து கொண்டுள்ளதாக தெரிவித்தே பொதுமக்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். 
இன்று காலை 7.00 மணியளவில் மட்டக்களப்புக்கு வேலைக்கு சென்றகொண்டிருந்த கன்னன்குடாவை சேர்ந்த 27வயதுடைய கே.சுதாகரன் என்ற இளைஞனை மண் ஏற்றிவந்து கொண்டிருந்த கன்டர் வாகனம் மோதியுள்ளது. 
இதன்போது இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் உடனயாக விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தினை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.  
எனினும் உரிய விசாரணையினை மேற்கொள்ளாமல் பொலிஸார் வாகனத்தினை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதாக தெரிவித்து பொதுமக்கள் வலையிறவு பாலத்தினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதன் காரணமாக வவுணதீவு பிரதேசத்தில் உள்ள அரச மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள் செல்லமுடியாதவாறு பாலத்தின் இரு மருங்கிலும் தரித்து நிற்பதை காணமுடிகின்றது. 
தமக்கு நீதி கிடைக்கும் வரை போக்குவரத்துக்கு வழிவிடமாட்டோம் என்று தெரிவித்;து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதேநேரம் சம்பவ இடத்துக்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், அமல் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் ஆகியோர் சம்பவம் தொடர்பில் பொதுமக்களிடம் கேட்டறிந்து கொண்டதுடன் பொலிஸாருடனனும் கலந்துரையாடினர்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate