திங்கள், 17 ஆகஸ்ட், 2015

மட்டக்களப்பு வாக்கு எண்ணும் நிலையத்திற்கு வாக்கு பெட்டிகள் வந்து கொண்டிருக்கின்றது.(photos)


பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பிற்கான நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்ளும் இன்றி நடைபெற்று முடிந்து. வாக்கு பெட்டிகளை வாக்கு எண்ணும் நிலையமான மட்டக்களப்பு  இந்துக்கல்லூரிக்கு பலத்த பொலிஸ் பாதுக்கப்பின் மத்தியில் வந்து கொண்டிருக்கின்றது.




இதேவேளை இன்று நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாட்டத்தில் ஐந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 16 கட்சிகள் மற்றும் 30 சுயேட்சைக் குழுக்களில்  368 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 1,72,499 பேரும், கல்குடா தொகுதியில் 1,05,056 பேரும், பட்டிருப்பு தொகுதியில் 87,612 பேருமாக மொத்தம் 3,65,167 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருப்பதாக மாவட்ட தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாவில் 115 நிலையங்களும்,    மட்டக்களப்பில் 199 நிலையங்களும், பட்டிருப்பில் 100 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர். சசீலன் தெரிவித்தார்.




Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624831

Translate