மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் வாக்குகள் பிளவுபடுவதை தமிழன் என்ற வகையில் தான் விரும்பவில்லை என மட்டக்களப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் அருள் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் தமிழ் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றி கொள்ள வேண்டுமாக இருந்தால் தமிழ் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய தேசியகட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தால் முஸ்லீம்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படும் வாய்ப்பு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு போன்ற தேசியக்கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களித்த போதிலும் தமிழர்கள் யாரும் தெரிவு செய்யப்படவில்லை என்றும் முஸ்லீம்களே தெரிவானதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த பொதுத்தேர்தலி;ல் 4ஆயிரம் வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மேலதிகமாக பெற்றிருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 முஸ்லீம்களும் ஒரு தமிழரும் மட்டுமே தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக