வியாழன், 13 ஆகஸ்ட், 2015

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா -7ஆம் திருவிழா

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றுவருகின்றது.


கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான வருடாந்த மகோற்சவத்தில் தினமும் தம்பபூஜை வசந்த மண்டப பூஜை சுவாமி உள்வீதி மற்றும் வெளிவீதியுலா என்பன நடைபெற்றுவருகின்றன.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகேஸ்வத்தின் ஏழாம் நாள் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த உற்சவத்தின்போது வசந்த மண்டப பூஜை நடைபெற்று சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது இலங்கையின் தலைசிறந்த நாதஸ்வர வித்துவான்களின் கச்சேரியும் நடைபெற்றது.

வருடாந்த மகோற்சவத்தில் நாளை வியாழக்கிழமை காலை தேர் உற்சவம் நடைபெறவுள்ளதுடன் வெள்ளிக்கிழமை மாமாங்கேஸ்வரரின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா -7ஆம் திருவிழா (வீடியே இணைப்பு)




















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624837

Translate