இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் 22 வது பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று (21) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இவர் இலங்கை வரலாற்றில் டட்லி சேனாநாயக அவர்களின் பின்னர் அதிக தடவையாக பிரதமராக பதவியேற்றுள்ள தலைவர் என்பது அரசியல் வரலாற்றுப் பதிவில் இடம்பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி செயலகத்தில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நான்காவது தடைவையாக பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட இந்நிகழ்வில் மதத் தலைவர்களும் , அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக