தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து சம்பந்தன் ஐயாவின் சிந்தனையான 20 ஆசனங்களை பெற்று பேரம் பேசும் சக்தியாக மாறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வியூகத்தை இல்லாதொழிக்கவே பேரினவாதிகள் கங்கணம் கட்டி செயற்படுகின்றன. இதனை தடுக்க தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் ஒன்று படவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.
புளியந்தீவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றகையிலேNயு அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தமிழ் மக்களின் ஒரே சொத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு. அதை அழித்துவிட பல சக்திகள் முனைகின்றன. அமைதி நிலவுவதைப்போல் ஒரு மாயை இருந்தாலும் இன்னும் தமிழ் மக்கள் அடிமைகளாகவே வாழ்கின்றனர்.
தமிழ் மக்களின் ஒரே சொத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு. அதை அழித்துவிட பல சக்திகள் முனைகின்றன. அமைதி நிலவுவதைப்போல் ஒரு மாயை இருந்தாலும் இன்னும் தமிழ் மக்கள் அடிமைகளாகவே வாழ்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 74 சதவீத தமிழ் மக்கள் வாழ்கின்றனர். விகிதாசார அடிப்படையில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிக்கு உரித்தான நாங்கள் 3 ஆசனங்களையே பெறுகின்றோம். நமது வாக்குகளை சிதறடித்து பிரதிநிதித்துவத்தை குறைக்கவே 30 சுயேட்சைக் குழுக்கள் களமிறக்கப்பட்டிருக்கின. இலங்கையிலேயே அதிகமாக 46 குழுக்கள் போட்டியிடும் ஒரே மாவட்டம் மட்டக்களப்புதான் எனவும் அவர் குறிப்பிட்டார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக