சனி, 15 ஆகஸ்ட், 2015

ஆட்சியை தீர்மானிக்க போகும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமைச்சு பதவிகளை பெறாது- பஷீர் சேகுதாவுத்

இம்முறை பெரும்பான்மை பலம் கொண்ட ஆட்சியை எந்த கட்சியாலும் அமைக்க முடியாது. தொங்கு பாராளுமன்றமே அமையும். அங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பே அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக அமையும், ஆனால் அவர்கள் அமைச்சு பதவிகளுக்கு பின்னால் செல்லாது தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்கே அந்த பலத்தை பயன்படுத்தி கொள்வார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவுத் தெரிவித்தார்.

இம்முறை தேர்தலில் போட்டியிடாத பஷீர் சேகுதாவுத் தன்னுடைய நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவுபடுத்துமுகமாக விசேட கூட்டம் ஒன்றை நேற்றிரவு ஏறாவூர் மௌலானா பூங்காவில் நடத்தினார். அக்கூட்டத்தில் உரையாற்றிய பஷீர் சேகுதாவுத் அமைச்சு பதவிகளுக்கு பின்னால் செல்லாது தங்கள் மக்களின் இனப்பிரச்சினை தீர்வில் உறுதியாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை போல முஸ்லீம் சமூகமும் தங்களுடைய உரிமையை பெற்றுக்கொள்வதில் உறுதியாக இருக்க வேண்டும். அமைச்சு பதவிகளுக்காக எமது உரிமைகளை மீட்கும் பணியை மறந்து விடக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
baseer 1
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate