திங்கள், 24 ஆகஸ்ட், 2015

ஊனமுற்றவர்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினையை உடைத்தெறியும் நடன பயிற்சி பட்டறை

ஊனமுற்றவர்கள் எதிர்நோக்கு பிரச்சினைகளை துடைத்தெறிந்து சாதாரணமானவர்கள்போல் அவர்களையும் சமூகத்தில் உலாவச்செய்யும் வகையிலான விசேட விழிப்புணர்வு நடன பயிற்சிப்பட்டறையொன்று நாளை செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பமாகின்றது.


ஊனமுற்றவர்களையும் ஊனம் அற்றவர்களையும் இணைத்து கலப்பு முறையிலான நடன பயிற்சி பட்டறையினை நடாத்தவுள்ளது.

உலகளாவிய ரீதியில் ஊனமுற்றவர்களின் நலன்களுக்கு சார்பாக செயற்பட்டுவரும் விசபிலிட்டி என்னும் அமைப்பு இந்த நிகழ்வினை மேற்கொண்டுவருகின்றது.

இதனை முன்னிட்டு ஊடகவியலாளர்களை தெளிவூட்டும் நிகழ்வு இன்று காலை சத்துருக்கொண்டான் சர்வோதயம் நிலையத்தில் நடைபெற்றது.

விசபிலிட்டி அமைப்பின் தலைவியும் விசேட தேவையுடைய பெண்னான கர்தா கூனிங் மற்றும் நடன கலைஞர் மகேஸ் உமகிலிய,மனித உரிமை செயற்பாட்டாளர் ஹெலானா உள்ரிகே,மாரிங்கியோ ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நாளை சத்துருக்கொண்டான் சர்வோதய நிலையத்தில் இந்த நடன பயிற்சிப்பட்டறை ஆரம்பமாகவுள்ளதுடன் எதிர்வரும் 29ஆம் திகதி பிற்பகல் நடன நிகழ்வு காந்தி பூங்காவில் நடைபெறவுள்ளது.

இலங்கையின் பொலநறுவை,அனுராதபுரம்,அம்பாறை,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இந்த நிகழ்வுகளை நடாத்தப்படவுள்ளதாக விசபிலிட்டி அமைப்பினர் தெரிவித்தனர்.

ஊனமுற்றவர்களை சமூகத்தின் ஏனையவர்கள் போன்று நடமாடச்செய்யும் வகையில் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.






Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624955

Translate