வியாழன், 13 ஆகஸ்ட், 2015

ஏறாவூரில் கஞ்சா வைத்திருந்தவர் கைது

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் மிச்நகர் கிராமத்திலுள்ள வீடொன்றில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் இன்று காலை குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


மிச்நகர் கிராமத்தைச் சேர்ந்த இஸ்மாயில் றஹ{மான் (வயது 35) என்பவர் கஞ்சா விற்பனை செய்வதாக பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அவர் 6130 மில்லிகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பம் பற்றி பொலிஸார் மேலும் விசாரணைகளில் ஈடுபட்டுள்;ளனர்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624937

Translate