
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்காக பாராளுமன்ற பொதுத் தேர்தல் பரப்புரைக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலும் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
அந்த வகையில் பட்டிருப்புத் தொகுதிக்காக கூட்டம் களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் சு.விஜயரெத்தினம் தலைமையில் காலை 9.30 மணிக்கும்,
மட்டக்களப்பு தொகுதிக்காக கூட்டம் மட்டக்களப்பு பஸ் தரிப்பிடத்திந்கு முன்பாக (மாநகர சபை திரட்டு வளாகம்) பே.பிறேம்நாத் தலைமையில் மாலை 3.30 மணிக்கும்,
கல்குடா தொகுதிக்காக கூட்டம் சித்தாண்டி பிரதேச சபை சந்தை சதுக்கத்தில் ந.சிவனடியார் தலைமையில் மாலை 4.30 மணிக்கும் நடைபெறவுள்ளது.
இப் பரப்புரைக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை.சேனாதிராஜா, ஈ.பி.எல்.ஆர்.எப். கட்சி தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், டெலோ கட்சி தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் கட்சித் தலைவர் த.சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
அனைத்து பொதுமக்களும் தவறாது இவ்பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக