மட்டக்களப்பு மாவட்டத்தில் அமீர் அலி மற்றும் ஹிஸ்புல்லா பிரதி அமைச்சர்களாக இருந்தவேளை தமிழ் மக்களுக்கு சமத்துவமான சேவைகளை பெற்றுக்கொடுக்கவில்லையென சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் நல்லாட்சிக்கான முன்னணி சார்பில் போட்டியிடும் அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காரியாலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பினில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஹிஸ்புல்லாவையும் அமிர்அலியையும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்வதற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் எனவே தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக்கட்சிக்கோ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கோ வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக