காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மற்றுமொரு அமர்வு இம்மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 22 ஆம் 23 ஆம் திகதிகளில் களுவாஞ்சிக்குடி பகுதியில் சாட்சிப்பதிவு
இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாஸ தெரிவித்துள்ளார்.
இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாஸ தெரிவித்துள்ளார்.
அடுத்த இரு தினங்களிலும் வாழைச்சேனை பகுதி மக்களின் சாட்சியங்களை ஜனாதிபதி ஆணைக்குழு பதிவு செய்யவுள்ளது.
யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் காணாமற்போனவர்கள் தொடர்பாக குறித்த பிரதேசங்களில் இருந்து ஆயிரத்து 200 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் கூறியுள்ளார்.
ஆணைக்குழுவின் அமர்வு இடம்பெறுகின்ற நாட்களில் புதிய முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே மக்களின் சாட்சியங்களை காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு பதிவு செய்துள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக