எம் தமிழ் மக்களிடையே எழுந்துள்ள தமிழ்த் தேசிய அலையின் பேரெழுச்சியை பொறுக்காத ஈனர்கள் சிலர், தமிழ்த் தேசிய உணர்வெழுச்சி மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியினைப் பொறுக்காத, ஜீரணிக்கமுடியாத சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையையும் கூட்டமைப்பு வேட்பாளர்களிடையே சச்சரவுகளையும் ஏற்படுத்துவதற்காக மறைமுகமான, மலிவான ஈனப்பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.
எனது உயிரினும் மேலான தமிழ்த்தேசியம் நேசிக்கும் எம்மக்களுக்கு! என்று தலைப்பிட்டு இன்றைய தினம் வெளியிட்டுள்ள அவசர அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பாராளுமன்றத் தேர்தல் இறுதிப் பரப்புரை இது ஒருவகையில் தமிழ்த் தேசியத்தின் விடியலுக்கும் அஸ்தமனத்துக்குமிடையேயான குருஷேத்திரச் சமர்.
இந்நிலையில் எம் தமிழ் மக்களிடையே எழுந்துள்ள தமிழ்த் தேசிய அலையின் பேரெழுச்சியை பொறுக்காத ஈனர்கள் சிலர், தமிழ்த் தேசிய உணர்வெழுச்சி மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியினைப் பொறுக்காத, ஜீரணிக்கமுடியாத சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையையும் கூட்டமைப்பு வேட்பாளர்களிடையே சச்சரவுகளையும் ஏற்படுத்துவதற்காக மறைமுகமான, மலிவான ஈனப்பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இதற்காக இவர்கள் இணையத்தளங்களையும், துண்டுப்பிரசுரங்களையும் பயன்படுத்துகின்றார்கள். இத்தகைய அவதூறு பரப்புரைகள் எதிர்வரும் இரு தினங்களில் மேலும் அதிகரிக்கலாம். இறுவெட்டுக்களும் கூட வெளியாகலாம். இவற்றிக்கான அடிப்படைக்காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமோக வெற்றி எம்மக்களால் உறுதிப்படுத்தப்பட்டள்ளது என்பதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புக்களும் இதை உறுதி செய்கின்றனவையாகும்.
கருத்தை கருத்துக்களால், கொள்கையை கொள்கைகளால் எதிர்கொள்ள முடியாத இவர்களது இந்த ஈனத்தனமான பிரசாரங்கள் இதை வெளியிடுபவர்களது மனோவியாதியையே வெளிக்காட்டுகின்றது.
கடந்த மாகாணசபைத்தேர்தலின் போதும்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை தடுக்க இதே போன்ற ஈனப்பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் உண்மையை உணர்ந்தார்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மகத்தான வெற்றி பெறச்செய்தார்கள்.
தற்போது மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியைத் தடுப்பதற்காக அதே ஈனப்பிரச்சாரங்களை மேற்கொள்ளுகின்றார்கள். இவற்றின் உண்மைத் தன்மையையும் எம்மக்கள் அறிவார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இத்தேர்தலில் அமோக வெற்றிபெற செய்வார்கள். மீண்டும் ஏற்றுக்கொள்வார்கள். இது எனது உறுதியான நம்பிக்கை ஏனெனில் மக்கள் மனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இதயத்தில் மக்களும் இருக்கின்றார்கள். இது இன்னும் இருதினங்களில் புரியும். இதற்குமேல் என்னவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக