வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

சம்பூரில் 600 ஏக்கர் மக்களின் காணிகள் விடுவிப்பு!

11921855_1626792810935828_1762824614697959926_n_miniதிருகோணமலையின் சம்பூர் உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளில் மேலும் ஒருதொகுதி காணிகள் நாளை(சனிக்கிழமை) விடுவிக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 600 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ள குறித்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
கடந்த ஆறுமாதமாக நிச்சயமான ஆட்சி அமையாத நிலையில் காணிவிடுவிப்பில் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் அரசாங்கம் திண்டாடி வந்தது.
இந்தநிலையில் அண்மைய தேர்தலில் மைத்திரி- ரணில் கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில், காணி விடுவிப்பில் அதிரடியான சில நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
இதன் முதற்கட்டமாக நாளைய தினம் சம்பூரில் ஒருதொகுதி காணி விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- See more at: http://athavansrilanka.com/?post_type=post&p=264420#sthash.KftAPSDi.dpuf
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624845

Translate