திங்கள், 24 ஆகஸ்ட், 2015

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு. இரு இளைஞர்கள் படுகாயம் -கரடியனாறில் சம்பவம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.


ஞாயிற்றுக்கிழமை இரவு 11.00 மணியளவில் நடைபெற்ற இவ் விபத்துச் சம்பவத்தில் கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த எஸ். சுரேஷ்காந்தன் (14 வயது) என்றழைக்கப்படும் இளைஞனே உயிரிழந்தவராவர். அத்துடன் இவரின் சகோதரனான எஸ். சுபராஜ் (19 வயது) மற்றும் இவர்களின் நன்பன் கோவிந்தன் பிரவீன்(16 வயது) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த இவர்கள் முதலில் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

மேற்படி மூவரும் கொம்மாதுறையில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் செங்கலடி பதுளை வீதியில் கரடியனாறு பகுதியில் அமைந்துள்ள கோவில் திருவிழா ஒன்றுக்காக பயணித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்றவர்களின் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த பாலம் ஒன்றின் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.



இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate