மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் இருந்து கடும் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் மட்டக்களப்பு நகருக்கு கொண்டுவரப்பட்டன.
இலங்கையின் 15வது பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு இன்று காலை 7.00மணி தொடக்கம் வாக்களிப்பு நடைபெற்றுவந்தது.
இந்த நிலையில் வாக்களிப்பு இன்று பிற்பகல் 4.00மணியளவில் வாக்களிப்பு நிறைவுபெற்றதை தொடர்ந்து மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் உள்ள வெல்லாவெளி,பட்டிப்பளை ஆகிய பகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் இருந்து கடும் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகளை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களைப்பெற்றுக்கொள்வதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகளும் 30 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுவதுடன் அவற்றில் 368 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பொறுத்தவரையில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 65 வீதமான வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக தமிழ் பகுதிகளில் இந்த வாக்களிப்பு வீதம் மிகவும் குறைந்த நிலையிலேயே இடம்பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் 15வது பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு இன்று காலை 7.00மணி தொடக்கம் வாக்களிப்பு நடைபெற்றுவந்தது.
இந்த நிலையில் வாக்களிப்பு இன்று பிற்பகல் 4.00மணியளவில் வாக்களிப்பு நிறைவுபெற்றதை தொடர்ந்து மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் உள்ள வெல்லாவெளி,பட்டிப்பளை ஆகிய பகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் இருந்து கடும் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகளை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களைப்பெற்றுக்கொள்வதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகளும் 30 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுவதுடன் அவற்றில் 368 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பொறுத்தவரையில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 65 வீதமான வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக தமிழ் பகுதிகளில் இந்த வாக்களிப்பு வீதம் மிகவும் குறைந்த நிலையிலேயே இடம்பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 facebook-blogger:
கருத்துரையிடுக