ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேச மகா சபைக் கூட்டம்


வரலாற்றுச் சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேச மகா சபைக் கூட்டம் 2015.08.30ஆம் திகதி இடம்பெற்றது.
அக்கூட்டத்தின்படி வருடாந்த மஹோற்சவம் 2015.09.14 அதிகாலை 4.30 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 2015.09.27 (ஞாயிறு) தேரோட்டமும் 2015.09.28 (திங்கள்) தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.
அத்தோடு புதிய நிருவாக சபைத் தெரிவும் இடம்பெற்றது. இதன்படி தலைவர் பூ.சுரேந்திரராசா வண்ணக்கர் (கலிங்க குலம்), செயலாளர் இ.சாந்தலிங்கம் வண்ணக்கர் (படையாட்சி குடி), பொருளாளர் பா.சபாரெத்தினம் வண்ணக்கர் (உலகிப்போடி குடி) ஆகியோரும் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டனர். இவைதவிர குடிகள்சார்ந்து 2 பேர் விகிதம் உறுப்பினர்களாக தெரி வுசெய்யப்பட்டனர். 
அத்தோடு பணிக்கனார் குடிமக்களின் கோரிக்கையினைக்கருத்தில்கொண்டு இவ்வாண்டுமுதல் அக்குடி திருவிழாவிற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
இவ்வாலயத்தில் பண்டுபரபணியோடு குடி சார்ந்த திருவிழா முறைமை நடைமுறையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624941

Translate