சனி, 15 ஆகஸ்ட், 2015

இலங்கையில் நேர்மையான தேர்தல் நடைபெறும் என்று நம்புகின்றோம் -சர்வதேச கண்காணிப்பாளர்கள்

இலங்கையில் நீதியான நேர்மையான தேர்தல் நடைபெறுவதற்கான சூழல் உள்ளதாக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.


கிழக்கு மாகாணத்தில் சுதந்திர தேர்தலுக்கான ஆசிய வலையப்பின் சர்வதேச கண்காணிப்பாளர்கள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

இவர்கள் மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களுக்கு விஜயம் செய்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த கண்காணிப்பாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்,பொது அமைப்புகள்,ஊடகவியலாளர்கள் மற்றும் மதத்தலைவர்களை சந்தித்து நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

பவ்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் வேண்டுகோளின்பேரில் சுதந்திர தேர்தலுக்கான ஆசிய வலையப்பின் சர்வதேச கண்காணிப்பாளர்களான சாரா அன்வர்,பிலிதும் ட்ரயகேசம் தலைமையிலான குழுவினர் இந்த கண்காணிப்புகளை மேற்கொண்டனர்.

இலங்கையில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலின்போது வேட்பாளர்களின் செயற்பாடுகள்,வாக்காளர்களின் நிலைமை,தேர்தல் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டனர்.

தமதுக்கு இதுவரையில் எதுவித தேர்தல் முறைப்பாடுகளும் கிடைக்கவில்லையென குறித்த கண்காணிப்பு குழுவினர் தெரிவித்தனர்.

தாங்கள் சென்ற பகுதிகளில் நிலைமை சுமுகமான நிலையில் காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எதிர்வரும் தேர்தல் நீதியான நேர்மையான முறையில் நடைபெறுவதற்கான சூழல் நிலவுவதை காணமுடிவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.






Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624950

Translate