புதன், 26 ஆகஸ்ட், 2015

சித்தாண்டி பேராலயத்திற்கு பெரும் திரளான காவடி வருகை!

(நித்தி)
 வரலாற்று சிறப்பு பெற்ற சித்தாண்டி ஸ்ரீ வள்ளி குஞ்சரி சமேத ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி பேராலய வருடாந்த ப்ரம்மோற்சவப் பெருவிழாவின் பதினொராவது நாளாகிய இன்று (25) செவ்வாக்கிழமை நேர்த்திக்கடனுக்காக பெரும் திரளான பக்தர்கள் காவடிகள் வருகைதந்தன.சித்தாண்டியை அண்மித்த பல பிரதேசங்களில் இருந்து பக்தர்கள் காவடி ஆடி முருகனின் அருளைப்பெற வருகைதந்திருந்தனர்.




சித்தாண்டி காவடி கந்தனின் பேராலயத்தின் திருவிழா தொடங்கிய நாளில் இருந்து இறுதி வரைக்கும் பால் காவடி, முள்ளுக் காவடி, பறவைக் காவடி, பெண்கள் வாயலகு குத்தி நேர்த்தி செய்தல், ஆனந்தக் காவடி, அங்க பிரதட்சணை போன்ற பல்வேறு நேர்த்திகளை செய்து முடிப்பார்கள்.
நடைபெறயிருக்கின்ற ஆலய வருடாந்த பெருவிழாவின்போது ஆயத்தில் நடைபெறுகின்ற திருவிழாக்கள் அனைத்தும் குடிமுறையிலான திருவிழாக்களாக மிகவும் சிறப்பான முறையில் நடைபெறயிருப்பதுடன் ஆலய திருவிழாக்களில் அதிவிசேட தினங்களான மயில்கட்டுத் திருவிழா 26, 27, 28 ஆகிய மூன்று தினங்களிலும் அதிகாலை 4.00 மணியளவில் முருகப்பெரும் வள்ளி தெய்வயானை சமேதராய் ஆறுமுகமும் பன்னிரு திருக்கரங்களுடனும் நீல மயில் ஏறிப் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கண்கொள்ளா தெய்வீக காட்சி நடைபெறயிருக்கின்றன.

அந்தவகையில் நாளை ஆரம்பமாகவுள்ள மயில்கட்டு திருவிழாவிற்காக விசேட ஏற்பாடுகள் இன்றில் இருந்து ஆலயத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624840

Translate