வியாழன், 10 செப்டம்பர், 2015

மட்டு. நகரில் பாவனைக்குதவாத உணவுகளை விற்பனை செய்த 6 வர்த்தகர்கள் கைது

மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் மனித பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள் மற்றும் பழவகைகளை விற்பனை செய்த ஐந்து வர்த்ததகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவிலான பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் மற்றும் மனித பாவனைக்கு தீங்கு விளைவிக்கும் உணவு பரிமாறும் பாத்திரங்களையும் பொதுச்சுகாதார பிரிவினர் கைப்பறிறியுள்ளனர். 

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மாணிக்கம் உதயகுமாரின் பணிப்புரையின் கீழ் இன்று காலை மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல ஹோட்டல்கள், உணவு விடுதிகள், பழக்கடைகள், சிற்றுண்டி சாலைகள் என்பன திடீர் சுற்றிவளைப்பு மூலம் பரிசோதிக்கப்பட்டன. 

10 வர்த்தக நிலையங்களில் நடாத்திய சோதனை நடவடிக்கைககளின் போது பழுதடைந்த, அழுகிய, பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த 6 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். 

சுமார் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் அழிக்கப்பட்டதாக மாநகர சபை பிரதான பொது சுகாதார பரிசோதகர் நேசதுரை .தேவநேசன் தெரிவித்தார். 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate