செவ்வாய், 1 செப்டம்பர், 2015

பள்ளிக்குடியிருப்பு பிரதான வீதியை செப்பனிட்டு தருமாறு மக்கள் கோரிக்கை

திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பள்ளிக்குடியிருப்பு பிரதான வீதியானது 30 வருடங்களாக எதுவித அபிவிருத்திக்கும் உட்படாது மக்களின் போக்கு வரத்திற்கு மிகவும் கஸ்ரமாக குன்றும் குழியுமாக மோசமான நிலையிலேயே காணப்படுகின்றது.


இவ் வீதி ஊடாக தோப்பூர் பள்ளிக்குடியிருப்பு, சின்னக்குளம,; பாட்டாளிபுரம,; தங்கபுரம,; இத்திகுளம,; வீரமாநகர், நல்லூர் சீனம்வெளி, உப்புரல,; சோலையூர், சம்பூh,; கடற்கரைசேனை, விளக்கந்தை, இகல்;பாநகர் இலங்கைதுறை முகத்துவாரம்(லங்காபட்டினம்) போன்ற பல்வேறு கிராம மக்களுக்கான பிரதான வீதியாகவும்  கணப்படுகின்றதுடன் இவ் வீதியை 6000 க்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்றமையும் குறிப்பிடதக்கது.

இவ் வீதியை செப்பனிட்டுதருமாறு இக்கிராம மக்களால் வீதி அமைச்சு மாகாண விதி அமைச்சு பிரதேச செயலகம் பல்வேறு எதிர்கட்சி ஆளும் கட்சி பாராளுமன்ற மாகாணசபை உறுப்பினர்களிடமும் கோரிக்கைகள் விடுக்க்ப்பட்டு மகஜர்களும் கையளிக்கப்பட்டுள்ளதுடன் இவ் வீதியை செப்பனிட்டு தருமாறு கோரி இக்கிராம மக்களால் 2014ம் ஆண்டு பாரிய ஆர்ப்பாட்டம் முன்னேடுக்கப்பட்டு அப்போதய மாகாணசபை உறுப்பினர் இம்றான் மவுறுப்பிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும் .

மாணவர்கள் நோயாளிகள் முதியவர்கள் போன்றோர் இதில் பெரிதும் பாதிப்பப்டுவதுன்; நோயாளிகளை அருகில் உள்ள தோப்பூர் வைத்தியசாலைக்கு விரைவாக கொண்டு செல்ல முடியாத துர்பாக்கிய நிலையிலேயே இம் மக்கள் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே மூதூர் பள்ளிக்குடியிருப்பு பிரதான வீதியை மிக விரைவாக செப்பனிட்டு தருமாறு இக்கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.






Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate