(நித்தி)
மட்டக்களப்பு செங்கலடி ரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத பெருமானுக்கு எதிர்வரும் 16ம் திகதி புதன்கிழமை மகா கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது . நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பல பிரதேசங்களிலும் இருந்து வந்த தமிழ் மக்களுக்கு அடைக்கலம் தந்து அவர்களை பாதுகாத்து நின்ற செங்கலடி ரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத பெருமானுக்கு மகா கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக செங்கலடி பிரதேசத்தில் அருள் பாளித்துவரும் ரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத பெருமானுக்கு மகா கும்பாபிசேகம் நடைபெறவுள்ள திரவருள் கூடிவந்துள்ளது.
இந்துமா சமுத்திரத்தின் முத்து என சிறப்பிக்கப்படும் இலங்கைமணித்
திருநாட்டில் நீர்வளமும், நிலவளமும், நிறையப்பெற்று தேமதுரத் தமிழும்
சைவமும் தழைத்தோங்கும் இயற்கை எழில்கொஞ்சும் மீன்பாடும் தெனாடு என சிறப்பித்துக் கூறப்படும் மட்டக்களப்பு செங்கலடி நகரினிலே கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுதப் பெருமானுக்கு மகா கும்பாபிசேகப் பெருவிழா நடைபெறவிருக்கின்றது.
நிகழும் மங்களகரமான மன்மத வருடம் ஆவணி 30ம் நாள் அதாவது 16.09.2015
புதன்கிழமை அன்று திருதியை திதியும், சித்திரை நட்சத்திரமும் அமிர்தசித்த
யோகமும் கூடிய காலை 10மணி முதல் 11மணி 47 நிமிடம் வரையுள்ள விருச்சிக லக்கின சுபமுகூர்த்த வேலையில் செங்கலடி ரமேஸ்புரம் சித்திரவேலாயுதப் பெருமானுக்கு மகா கும்பாபிசேகம் நடைபெற இருக்கின்றது.
புனராவர்த்தன அஸ்டபந்தன நவகுண்டபஸ மகா கும்பாபிசேகப் பெருவிழாவின் கிரியாகால நிகழ்வுகள் யாவும் எதிர்வரும் ஆவணி 27ம் நாள் அதாவது 13.09.2015 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி ஆவணி 30ம் நாள் அதாவது 16.09.2015 புதன்கிழமை நிறைவுபெறவுள்ளது.
கும்பாபிசேக நிகழ்வுகள் அனைத்தும் சர்வதேச இந்துமத குருபீடாதிபதியும்
சபரிமலைக் குருமுதல்வருமாகிய ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.
ஆவணி 27ம் நாள் 13.09.2015 ஞாயிற்றுக்கிழமை விநாயகர் வழிபாடு
மகா கணபதிஹோமம், திரவிய சுத்திஇசாந்தி ஹோமம், போன்ற பலமுக்கிய கிரியைகள் நடைபெறவுள்ளதுடன்.
ஆவணி 28ம் நாள் 14.09.2015 திங்கட்கிழமை கிராமசாந்தி, வாஸ்த்துசாந்தி,
ஸ்ரீ சண்முக ஹோமம், யந்திரஸ்தாபனம் போன்ற பல முக்கிகிரியைகள் நடைபெற்று மறுநாள் காலை ஆவணி 29ம் நாள் அதாவது 15.09.2015 செவ்வாய்க்கிழமை காலை 8மணி முதல் பிற்பகல் 4மணிவரை உள்ள காலப்பகுதியில் எண்ணெய்க் காப்பு
சாத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
ஆவணி 30ம் நாள் அதாவது 16.09.2015 புதன்கிழமை அன்று திருதியை திதியும்,
சித்திரை நட்சத்திரமும் அமிர்தசித்த யோகமும் கூடிய காலை 10மணி முதல்
11மணி 47 நிமிடம் வரையுள்ள விருச்சிக லக்கின சுபமுகூர்த்த வேலையில்
சித்திரவேலாயுதப் பெருமானுக்கு நவகுண்டபஸ மகா கும்பாபிசேகப் பெருவிழா நடைபெறவுள்ளது.
சித்திரவேலாயுதனின் மகா கும்பாபிசேக நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பிப்பதுடன் அன்றையதினம் நடைபெறும் அன்னதான நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு வேலாயுதப்பெருமானின் அருட்கடாச்சங்கை பெற்றுச்செல்லமாறு இறையருள் கொண்டு உங்களை அழைக்கின்றார்கள் செங்கலடி ரமேஸபுரம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய பரிபாலனசபையினர்.கும்பாபிசேக நிகழ்வுகளை தொடர்ந்து 24 நாட்கள் மண்டலாபிசேகம் நடைபெறவுள்ளது.அனைவரும் வருக சித்திரவேலாயுதக் கந்தனின் அருள் பெறுக!
0 facebook-blogger:
கருத்துரையிடுக