GJ Prakas

நேற்று ஐந்தாவது நாளாக களுவாஞ்சிகுடி இராஜமாணிக்கம் மண்டபத்திக்கு அருகில் 13/09 /2015 காலை இருந்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையொப்பம் இடும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இங்கு பல மக்கள் கையொப்பம் இட்டுவருவதனை அறியக் கூடியதாக உள்ளது. அத்தோடு இங்கு கையொப்பம் இடும் மக்களின் ஒருமித்த குரலாக சர்வதேச விசாரணை என்பது எமது தமிழினத்தின் இன அழிப்பிக்கான நீதி பெற்று தரும் எனும் நம்பிக்கையானது என்பதனை உறுதியாக கூறுகின்றனர். அத்தோடு உள்ளுர் விசாரணை என்பது தமிழ் மக்களுக்கு வெறும் கண் துடைப்பாக அமையும் என்பதை பல ஆதாரங்களை முன்னுருத்தி கூறுகின்றனர்.
அதாவது வடகிழக்கில் 60 வருடமாக பல் வேறு இன அழிப்பிக்கு மத்தியில் சிக்குன்டு வாழும் எமக்கு ஸ்ரீலங்கா நீதி மன்றங்கள் நீதியான நீதிகளை பெற்று தரவில்லை.அத்தோடு ஸ்ரீலங்கா அரசு கூட பல கொலைகாரர்களை பாதுகாக்கும் அரசாக இருக்கிறது தவிற எந்த குற்றவாளிகளையும் நீதிக்கு முன் நிறுத்தியதக்கான சான்றுகள் இல்லை என்பதையும் குறிப்பிட்டனர்.அத்தோடு வடகிழக்கில் நடைபெற்ற இன அழிப்பானது வெறுமனே ஸ்ரீலங்கா அரசினால் மட்டும் நடத்தியதில்லை இது அமெரிக்கா,இந்தியா,பாகிஷ்தான்,சீனா,இரஷ்சியா போன்ற நாடுகளின் பங்கு பற்றலில் பூகோல அரசியலை மையப்படுத்தி நடாத்திய இராஜதந்திர இன அழிப்பு இதக்கு உள்ளுர் நீதிமன்றத்தில் இதனை விசாரணை செய்வது என்பது தமிழ் மக்களுக்கு எட்டாக்கனியாக அமையும் தவிர எதுவும் நடக்காது என்பதோடு. சர்வதேச விசாரணை என்பது மிகவும் முக்கியமானது என்பதை பல சர்வதேச சட்ட வல்லுனர்கள் அடிக்கடி கூறிவருவதை அறியக்கூடியதாக உள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக