திங்கள், 7 செப்டம்பர், 2015

வவுணதீவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமோக வரவேற்பு

மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த தேர்தலில் போட்டியிட்டு பெற்றிபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் முதலாவது நிகழ்வு கடந்த (05) சனிக்கிழமை மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்வினை வவுணதீவு பொது மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் கிழக்குமாகாண சபை விவசாய  அமைச்சருமான இ.துரைராஜசிங்கம்  மற்றும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் , எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்த பொதுமக்களினால் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் உரைநிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.











Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate