(வேரம் - விஜிகரன்) சிறப்பும் மகிமையும், 800 வருடங்கள் பழமையும் கொண்ட ஏறாவூர்-5 ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி தேவஸ்தானத்தின் மகோற்சவம் 18.09.2015 வெள்ளிக்கிழமை வளர்பிறைச் சதுர்த்தியில் ஊர்க்காவல், ஆலயக்காவல்,விநாயகர் ஹோமம், சாந்தி என்பவைகளுடன் ஆரம்பமாகின்றது. 18.09.2015 ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து காலையில் கொடிச்சீலை எடுத்து வரப்பட்டு கொடியேற்றப்பட்டு மகோற்சவங்கள் ஆரம்பமாகும்.
மகோற்சவ திருவிழாக்களில் மகா சங்காபிஷேகம் பூங்காவனம், திருவேட்டை, அம்பாள் ஆலய பவனி, தேர்த்திருவிழா, தீ மிதிப்பு, கடல் தீர்த்தம் என்பவைகள் சிறப்பு அம்சம் கொண்ட மகோற்சவ திருவிழாக்களாக இவ்வாலயத்தில் அமைவு பெற்றுள்ளன. தேர்த்திருவிழா 26.09.2015 சனிக்கிழமை மிக விமர்சையாக இடம்பெறும். 27.09.2015 ஞாயிற்றுக்கிழமை கடல் தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவடையவுள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக