திங்கள், 7 செப்டம்பர், 2015

வரலாற்று சிறப்பு பெற்ற ஏறாவூர்-5 ஸ்ரீ மது­ம­லர்க்கா வீர­பத்­திரர் சுவாமி தேவஸ்தான மகோற்­சவம் - 2015

(வேரம் - விஜிகரன்) சிறப்பும் மகி­மையும், 800 வருடங்கள் பழமையும் கொண்ட ஏறாவூர்-5 ஸ்ரீ மது­ம­லர்க்கா வீர­பத்­திரர் சுவாமி தேவஸ்­தானத்தின்  மகோற்­சவம் 18.09.2015 வெள்ளிக்கிழமை வளர்­பிறைச் சதுர்த்­தியில் ஊர்க்காவல், ஆல­யக்­காவல்,விநா­யகர் ஹோமம், சாந்தி என்­ப­வை­க­ளுடன் ஆரம்­ப­மா­கின்­றது. 18.09.2015 ஸ்ரீ வர­சித்தி விநா­யகர் ஆல­யத்­தி­லி­ருந்து காலையில்  கொடிச்சீலை எடுத்து வரப்­பட்டு கொடி­யேற்­றப்­பட்டு மகோற்­ச­வங்கள் ஆரம்­ப­மாகும்.




மகோற்­சவ திரு­வி­ழாக்­களில் மகா சங்­கா­பி­ஷேகம் பூங்­கா­வனம், திருவேட்டை, அம்பாள் ஆலய பவனி, தேர்த்­தி­ரு­விழா, தீ மிதிப்பு, கடல் தீர்த்தம் என்­ப­வைகள் சிறப்பு அம்சம் கொண்ட மகோற்­சவ திரு­வி­ழாக்­க­ளாக இவ்­வா­ல­யத்தில் அமைவு பெற்­றுள்­ளன. தேர்த்­தி­ரு­விழா 26.09.2015 சனிக்கி­ழ­மை மிக விமர்சையாக இடம்பெறும். 27.09.2015 ஞாயிற்றுக்கிழமை கடல் தீர்த்­தோற்­சவத்துடன் இனிதே நிறைவடையவுள்ளது. ­

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate