வியாழன், 10 செப்டம்பர், 2015

அரசியலமைப்பு சபை முதல் முறையாக இன்று கூடுகிறது

19வது திருத்தச் சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சபை இன்று முதல் தடவையாக கூடவுள்ளது. 

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (10) பகல் 12 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அரசியலமைப்புச் சபை கூடவுள்ளது. 

எட்டாவது பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு சபை பிரதிநிதிகளாக நேற்று மூவர் நியமிக்கப்பட்டனர். ஜனாதிபதியின் பிரதிநிதியாக பாரிய நகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் பிரதமரின் நேரடி பிரதிநிதியாக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும், விஜித்த ஹேரத் ஆகிய மூவருமே நேற்றைய தினம் நியமிக்கப்பட்டவர்களாவர். 

எட்டாவது பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு சபை பிரதிநிதிகளை நியமிக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய சம்பந்தப்பட்டவர்களிடம் எழுத்து மூலம் கேட்டுக் கொண்டிருந்தார். இதற்கமையவே நேற்று இவர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. 

பத்து பேரைக் கொண்ட அரசியமைப்பு சபையில் 07 பாராளுமன்ற உறுப்பினர்களும் 03 சிவில் அமைப்பு உறுப்பினர்களும் உள்ளடக்கப்படுவர். 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate