செவ்வாய், 1 செப்டம்பர், 2015

மட்டக்களப்பு ஆயித்தியமலை சதாசகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

(அமிர்தகழி நிருபர் )

கிழக்கிலங்கையில்  பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு  ஆயித்தியமலை சதாசகாய அன்னை  ஆலய வருடாந்ததிருவிழா  திருப்பலி பங்குதந்தை  அருட்பணி ஜுலியன் தலைமையில்  28.08.2015  வெள்ளிக்கிழமைமாலை 05.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .

  கொடியேற்றத்தினை தொடர்ந்து  யேசுசபைதுறவி சகாயநாதன் தலைமையில்  விசேட  திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டதுடன் அன்னையின் ஆசிரும்இடம்பெற்றது  .

தொடர்ந்து  நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.03 மணிக்கு திருசெபமாலை யும் திருப்பலிம் இடம்பெறவுள்ளது .

05.09.2015  சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு  ஆலயத்தில் விசேட திவ்விய நற்கருணை வழிபாடுகளும் இமறைவுரைகளும்  இடம்பெறவுள்ளதுடன்   தொடர்ந்து  சதாசகாய அன்னையின் திரு உருவ பவணியும்விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்படவுள்ளது  .

06.09.2015 ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட  ஆயர் பொன்னையாஜோசப் ஆண்டகை   தலைமையில் விசேட  திருநாள்  திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு  திருப்பலியின்  பின்ஆலய திருவிழா   திருநாள்  கொடியிறக்கத்துடன் ஆலய வருடாந்த திருவிழா நிறைவுபெறும் .





















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate