செவ்வாய், 1 செப்டம்பர், 2015

மட்டக்களப்பு பனிச்சையடி அனைத்துலக நாடுகளின் அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி

(அமிர்தகழி நிருபர் )

மட்டக்களப்பு பனிச்சையடி அனைத்துலக  நாடுகளின்  அன்னை  ஆலய வருடாந்த திருவிழா  திருப்பலி   30.08.2015 ஞாயிற்றுக் கிழமை காலை  கல்முனை பாத்திமா கல்லூரி அதிபர் அருட்பணி  பிறையின் செல்லர்  தலைமையில்  பங்குதந்தை  அருட்பணி ஜேசுதாசன் மற்றும் அருட்பணி நோட்டன் ஜோன்சன் ஆகியோர் இணைந்து  திருநாள்  திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்  .


ஆலய திருவிழா கடந்த 21.08.2015 வெள்ளிக்கிழமை மாலை  கொடியேற்றத்துடன் ஆரம்பமானதுடன்  தொடர்ந்து  நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.03 மணிக்கு திருசெபமாலை  அருளுரைகளுடன் திருப்பலியும் இடம்பெற்றது.

29.08.2015 சனிக்கிழமை  மாலை 05.30 மணிக்கு  ஆலயத்தில் விசேட திவ்விய நற்கருணை வழிபாடுகளும் இ மறைவுரைகளும்  இடம்பெறவுள்ளதுடன்   அன்னையின் திரு உருவம் பவணி  வழமையான வீதிகளினுடாக எடுத்துவரப்பட்டு  ஆலயத்தில் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது  .

30.08.2015 ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு கல்முனை பாத்திமா கல்லூரி அதிபர் அருட்பணி  பிறையின் செல்லர்  தலைமையில்  திருநாள்  திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது .  திருப்பலியின் பின்   ஆலய திருவிழா  கொடி இறக்கத்துடன்  ஆலய வருடாந்த திருவிழா  நிறைவுபெற்றது.














Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate