(வேரம் - விஜிகரன்) மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட மாவடிவேம்பு கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
மாவேடிவேம்பு – 1 கிராமர்சேவகர் பிரிவு எல்லை வீதியைச் சேர்ந்த கோணேசன் றமேஸ்குமார் (36) என்பவரே நேற்று இரவு சுமார் 9 மணியளவில் அடித்தும் வெட்டியும் கொல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் பொலிசாருக்கு முறைபாடு கொடுத்துள்ளனர்.
பணக் கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டவரின் ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டதன் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் முதல்கட்ட விசாரணையின் போது தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் பிரம்பு தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது.
கொலை செய்யப்பட்டவரின் சடலம் செங்கலடி வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மரண விசாரணையை அடுத்து உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கொல்லப்பட்டவரின் ஒன்றுவிட்ட சகோதாரனான பொன்னுத்துரை தேவதாஸன் (வயது 29) தலைமறைவாகி இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த கொலை சம்பவம் தொடர்பான விசாரணையை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக