யாழ்ப்பாணம், திருகோணமலை, அம்பாறை தேர்தல் மாவட்டங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கான ஆசன ஒதுக்கீடுகள் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
எனினும் மட்டக்களப்பு, வன்னி தேர்தல் மாவட்டங்கள் தொடர்பான முடிவுகள் இன்னும் எடுக்கப்பட வேண்டியுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் ஒவ்வொரு கட்சிக்கும் வேட்பாளர் பட்டியலில் ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்து உத்தேசமாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீடுகள் குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த இரு மாவட்டங்களுக்குமான ஆசனப் பங்கீடு தொடர்பில் அடுத்த சில நாட்களில் கூட்டமைப்பு முடிவு செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த எம்.ஏ. சுமந்திரன் இம்முறை யாழ்ப்பாணத்திலிருந்து போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நாடாளுமன்றத்தில் யாழ்ப்பாணத்தைப் பிரதிநிதித்துவப் படுத்திய விநாயகமூர்த்தி, உடல்நிலை காரணமாகப் இம்முறை போட்டியிடமாட்டார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக