அம்பாறை மாவட்டத்தில் ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் காணாமல்போன மாணவி தொடர்பில் ஆசிரியர் ஒருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி தற்போது சவளக்கடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட ஆசிரியர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்மாந்துறை போரக் கோயில் தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர் தரம் கற்கும் ஜோசப் காஞ்சனா (வயது 17) என்ற யுவதி தனது தாயுடன் கல்முனை ஆதாரவைத்தியசாலைக்கு சென்ற போது நேற்றை முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் காணாமல் போனதாக அவரது தாய் முத்து அரசம்மா (வயது 37) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
மேலும் குறித்த மாணவி அப்பாடசாலையில் ஆசிரியர் கோபாலரெட்ணம் விஜய் (வயது 30) என்பவரோடு பொலிஸ் நிலையத்திற்கு சமுகமளித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து குறித்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை அன்று தான் வைத்தியசாலை முன்பாக நின்றபொழுது குறித்த ஆசிரியர் முச்சக்கர வண்டியில் வந்து தன்னுடன் வருமாறு கூறியதாகவும், அங்கிருந்து சென்று நாவிதன்வெளியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்து வெள்ளிக்கிழமை இரவுப் பொழுதைக் கழித்ததாகவும் கூறியுள்ளார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக