வெள்ளி, 3 ஜூலை, 2015

ஏறாவூர் த. ம. வித்தியாலய அதிபர் சர்ச்சைக்கு தீர்வு ; கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

(செங்கலடி சுபஜன்)   
ஏறாவூர் தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்­திற்கு புதிய அதிபர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்­டதை தொடர்ந்து ஒரு வார­மாக ஏற்­பட்­டி­ருந்த சர்ச்­சைக்கு சுமூ­க­மான தீர்வு காணப்­பட்­டதால் பாட­சாலைக் கல்விச் செயற்­பா­டுகள் நேற்று வியா­ழக்­கி­ழமை முதல் வழ­மைக்கு திரும்­பி­யுள்­ள­தாக பெற்றோர் தெரி­வித்­தனர். இப்பாட­சா­லைக்கு புதி­தாக நிய­மிக்­கப்­பட்ட அதிபர் நேற்று வியா­ழக்­கி­ழமை முதல் மஞ்­சந்­தொ­டுவாய் பாரதி வித்­தி­யா­ல­யத்­திற்கு இட­மாற்­றப்­பட்­டதைத் தொடர்ந்து கடந்த 26ஆம் திகதி வெள்ளிக்­கி­ழமை முதல் மாண­வர்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்த வகுப்பு பகிஷ்­க­ரிப்பு போராட்­டமும் கைவி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்கள் தெரி­வித்­தனர். புதி­தாக நிய­மிக்­கப்­பட்ட அதிபர் தொடர்­பான சர்ச்­சை­யை­ய­டுத்து தரம் 01 தொடக்கம் 12 வரை­யான மாண­வர்கள் பாட­சா­லைக்கு செல்­லாமல் பகிஷ்­க­ரிப்பு போராட்­டத்தில் ஈடு­பட்டு
வந்­ததால் பாட­சா­லையின் கல்விச்
செயற்­பா­டுகள் ஸ்தம்­பி­த­ம­டைந்து காணப்­பட்­டன. இத­னை­ய­டுத்து இப் பாட­சா­லைக்கு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நேர­டி­யாக விஜயம் செய்த மாகாணக் கல்விப் பணிப்­பாளர் எம்.ரி.எம். நிஸாம், வலயக் கல்­விப்­ப­ணிப்­பா­ளர், கோட்டக் கல்வி அதி­காரி மற்றும் பெற்றோர் ஆகி­யோ­ருடன் நடத்­திய பேச்சு வார்த்­தை­க­ளுக்­க­மைய இப் பாட­சா­லையில் ஏற்­க­னவே கட­மை­யாற்றி வந்த அதிபர் இப் பாட­சா­லையில் கட­மை­யாற்­றத்­தக்­க­வாறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­துடன் புதி­தாக நிய­மிக்­கப்­பட்ட அதிபர் உட­ன­டி­யாக மஞ்­சந்­தொ­டுவாய் பாரதி வித்­தி­யா­ல­யத்­திற்கு இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்ளார்.
இத­னை­ய­டுத்து பாட­சா­லையில் நிலவி வந்த சர்ச்­சைகள் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டதால் மாண­வர்­களின் கல்விச் செயற்­பா­டு­களும் வழ­மைக்குத் திரும்­பி­யுள்­ள­தாக பெற்றோர் தெரிவித்தனர்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate