புதன், 8 ஜூலை, 2015

த.தே.கூ வின் கிறிஸ்தவர் ஒருவருக்கான சந்தர்ப்பம் ஆ.கி.பிரான்ஸிஸ் (வாகரை முகிலன்)க்கு வழங்கப்படுமா?

கிறிஸ்தவர்களும் மட்டக்களப்புத் தொகுதியைச் சேர்ந்தவர்களும் தொடர்ச்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் புறக்கணிப்பட்டு வருவதற்கு மற்றுமொரு உதாரணம் இம் முறை தேர்தலிலுமு; நிகழவிருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழரசுக்கட்சியிடம் விண்ணப்பித்த வாகரையைச் சொந்த இடமாகக்கொண்ட மட்டக்களப்பைச் சேர்ந்த கிறிஸ்தவரும் ஆரம்பகாலம் முதல் தமிழ் தேசிய அரசியலில் நின்று செயற்படுபவருமான ஆ.கி.பிரான்சிஸ் போட்டியிடுவதற்காக அனுமதிக்கப்படவில்லை என்ற கேள்வி ஒன்று மட்டக்களப்பு கிறிஸ்தவர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. 

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் செயலாளரும் கிழக்குமாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கத்திடம் பிரான்சிஸ் கையளித்திருந்தார். 

இதன் பிரதிகள், பாராளுமன்ற உறுப்பினர்களான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகயோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

வாகரையூர் முகிலன் என்று அழைக்கப்பட்டு வரும் ஆனிமுத்து கிறிஸ்துராஜா பிரான்சிஸ் கலைப்பட்டதாரியாகும். ஆசிரியராக நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் தற்போது கற்பித்து வருகிறார்.

இதற்கு முன்னர்  மண்முனைப்பற்று (ஆரையம்பதி) ப.நோ.கூ.சங்கத்தில் கணக்கு இலிகிதர், கோறளைப்பற்று வடக்கு (வாகரை) ப.நோ.கூ.சங்கத்தில் பொதுமுகாமையாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில்                             மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இளைஞர் சேவை அலுவலகர், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் திணைக்களத்தில் நலன்புரி உத்தியோகத்தர் ஆகிய தொழில்களில் செயற்பட்டிருக்கிறார்.

பொதுச் சேவைகள் வரிசையில்,  இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கல்லூரிக்கிளை, மட்டக்களப்பு மாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்கம், மண்முனை வடக்கு கலாசார பேரவை, தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாச்சபை, மட்டக்களப்பு, அமரர் வணசிங்கா அவர்களது 25ஆவது நினைவுப் பணிச்சபை,                                 பேராசிரியர் செ.யோகராசா மணிவிழாச்சபை, மட்டக்களப்பு எனப் பல்வேறு அமைப்புகளில் தலைவர், செயலாளர் , துணைச்செயலாளர் , உறுப்பினர் என பல பதவிகளை வகித்துள்ளார்.

அரசியற்செயற்பாடுகள் வரிசையில், துணைத்தலைவர் - தமிழ் மாணவர் பேரவை, மட்டக்களப்பு 1973., உறுப்பினர் - தமிழ் இளைஞர் பேரவை, மட்டக்களப்பு 1975.,  இணைப்பாளர் - தமிழ் இளைஞர் பேரவை கல்குடாத் தொகுதி இளைஞர் மகாநாடு,      தலைமை: கவிஞர் கா.சி.ஆனந்தன் 1977 வாகரை., செயலாளர் - தமிழ் இளைஞர் பேரவை – வாகரைக் கிளை 1976 – 1977.,  தமிழ் இளைஞர் பேரவைச் செயலாளர் மாவை சேனாதிராஜா அவர்களுடன் இளைஞர் பேரவை அமைப்புப் பணிகளில் ஈடுபட்டமை 1977 – 1981., பிரதேச அமைப்பாளர் - தமிழர் விடுதலைக் கூட்டணி, கல்குடாத்தொகுதியின் வடக்குப் பிரதேசம். 1981., பொன் மாணிக்கவாசகரின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரசார உரை 1970.,  கா.சி.ஆனந்தன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி) வேட்பாளருக்கான -மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியின் படுவான்கரைப்பிரதேச வாகனப்பிரசாரப் பொறுப்பாளர். 1977, கல்குடாத்தொகுதி வேட்பாளர் சி.சம்பந்தமூர்த்தி, பட்டிருப்புத்தொகுதி வேட்பாளர் பூ.கணேசலிங்கம் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசார உரை 1977, இணைப்பாளர் - அ.அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி முதல்வரானதை முன்னிட்டு      அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வு ஆரையம்பதி 1979., மாவட்ட அபிவிருத்தி சபைத்தேர்தலில் சி.சம்பந்தமூர்த்தி உட்பட அனைத்து உறுப்பினர்களையும் ஆதரித்து முழுநேரப் பிரசாரம், மட்டக்களப்பு  மாவட்டம்  1981 என இன்னும் பல செயற்பாடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் ஆ.கி.பிரான்சிஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்று அறியப்பட்டாலும், ஏன் என்பதற்கான பதில் கிடைக்குமா என்பதே இப்போதைய கேள்வியாகும்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate