மேஷம்

நல்லெண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்துவீர்கள். மதிப்பு, மரியாதை உயரும். அடுத்தவர்களுக்கு உதவுவீர்கள். சாதுக்கள், சந்யாசிகள், சான்றோர்களை சந்திக்கும் வாய்ப்பும், நிம்மதியும் கிடைக்கும். தன்னம்பிக்கை, உறுதி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் ஆலோசனைகள் அடுத்தவர்களுக்கு மிகுந்த உதவியாய் அமையும். மனதிற்கு பிடித்ததை அனுபவிக்கும் வாய்ப்புகள் நாடி வரும். குடும்பத்தினருக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டு. மாணவர்களின் கல்வித்தரம் உயரும். நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவதோடு உயர்கல்வியில் நினைத்த பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். வீடு, மனை போன்ற அசையா சொத்துகள் சேரும். திருமணத்தடை கண்டவர்கள் மணவாழ்வில் அடியெடுத்து வைப்பார்கள். இல்லத்தில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகள் நடைபெறத் துவங்கும். முக்கியமாகப் பிள்ளைப்பேற்றிற்காகக் காத்திருப்போரின் இல்லங்களில் மழலை வாசம் வீசத் துவங்கும். பிள்ளைகளின் வாழ்க்கை தரம் உயரும். தம்பதியருக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
தொழில்-உத்யோகம்: தடைகளை தாண்டி முன்னேற வேண்டும். உத்யோகஸ்தர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வுடன் மேலதிகாரிகளிடம் நற்பெயர் கிடைக்கும். பல், எலும்பு மருத்துவர்கள், சாப்ட்வேர் துறை சேர்ந்தவர்கள் சிறப்பான நிலையினை அடைவர். சமையல் கலைஞர்கள் வாழ்க்கை தரம் உயரும். அயல்நாட்டுப் பணிக்காகக் காத்திருப்போருக்கு சாதகமான பதில் வரும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். வியாபாரிகளுக்கு சீரான தனலாபம் உண்டு. குருப்பெயர்ச்சி உங்களுக்கு நற்பலன்களை தரும் வகையில் அமையும்.
பரிகாரம்: பிரதோஷ நாளன்று அருகிலுள்ள சிவாலயத்தில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்ளலாம். நந்தியம்பெருமானுக்கு காப்பரிசி நைவேத்யம் செய்து சிவபக்தர்களுக்கு விநியோகம் செய்து வருவதால் காரியத்தடைகள் விலகும். நேரம் கிடைக்கும்போது தஞ்சாவூர் சென்று பெருவுடையாரையும், நந்தியம்பெருமானையும் பிரதோஷ நாளில் தரிசிப்பது நன்மை தரும்.
ரிஷபம்

வாழ்வில் நிம்மதி அதிகரிக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நன்கு ஆலோசித்து செயல்படுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். புது ஆடை, ஆபரணங்கள் சேரும். சுக, சவுகர்யங்கள் நிறைந்து விளங்கும். தாயார் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். முன்னோர்கள் இழந்த சொத்துகளை மீட்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பும் சலசலப்பும் மாறிமாறி இருந்தாலும் செல்வம், சுகம் நிறைந்திருக்கும். தனிப்பட்ட முறையில் உங்கள் அந்தஸ்து உயரும். தம்பதியருக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்களின் கல்வித்தரம் உயரும். உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். புது வாகனங்கள் வாங்குவீர்கள். தாயார் வழி சொத்துகள் சேரும் அதே நேரத்தில் அவரது உடல்நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. அநாவசிய செலவுகள் குறையும். குறிப்பாக இந்த வருடத்தில் மருத்துவ செலவுகள் அதிகம் இராது. இரவில் நிம்மதியான உறக்கம் வரும். மறைமுக எதிரிகள் காணாமல் போவர்.
தொழில்-உத்யோகம்: தொழிலில் சாதகமான நிலை உருவாகும். தொடர்ந்து ஓய்வின்றி உழைக்க வேண்டிய சூழல் இருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எடுத்த காரியத்தை முழு மூச்சுடன் செய்து முடிப்பீர்கள். விரும்பிய இடமாற்றம், ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு இருக்கும். பலசரக்கு, ஓட்டல், ஸ்வீட் ஸ்டால், தின்பண்ட விற்பனை தொழில்கள் வளர்ச்சி பெறும். வியாபாரிகளின் தொழில் நிலை சிறக்கும். நவீன வியாபார உத்திகள் தொழில் முறையில் நல்ல வளர்ச்சியை உண்டாக்கும். இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது.
பரிகாரம்: ஒரு வருட காலத்திற்கு பிரதி வெள்ளிதோறும் பஞ்சமுக குத்துவிளக்கு ஏற்றி வைத்து மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ர பாராயணம் செய்து வந்தால் மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். நேரம் கிடைக்கும்போது குடும்பத்துடன் கன்னியாகுமரி சென்று திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்து குமரி அம்மனையும், விவேகானந்தர் பாறையில் உள்ள அம்மனின் திருப்பாதங்களையும் தரிசிப்பது நல்லது.
மிதுனம்

சங்கடங்களையும், தடைகளையும் தகர்த்தெரிய வேண்டியிருக்கும். மன உறுதியும், தைரியமும் கூடும். எதிர்பாராத அலைச்சல்கள் அதிகரிக்கும். எந்த ஒரு காரியத்திலும் தடங்கலும் அதன்பின் விடாமுயற்சியால் வெற்றியும் கிடைக்கும். முக்கிய பிரச்னைகளில் எளிதில் முடிவெடுக்க இயலாது திணறுவீர்கள். எடுத்த செயல்களில் வெற்றி பெற கூடுதல் எச்சரிக்கையோடு செயல்படுவது அவசியம். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். புதிய நண்பர்கள் சேருவார்கள். இக்கட்டான நேரங்களில் நண்பர்களின் உதவியால் வெற்றி காண்பீர்கள். பல புதிய மனிதர்களுடனான சந்திப்பு பல்வேறு அனுபவங்களை கற்றுத் தரும். மாணவர்கள் கல்வியில் சிறிது சிரமத்தினைக் காண்பார்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் குறைந்தாலும் சுயமுயற்சியின் வலிமை அதிகரிக்கும். தம்பதியருக்குள் அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றி மறையும். எனினும் வாழ்க்கைத்துணையோடு இணைந்து செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். அடுத்தவர்களுக்காக செய்யும் காரியங்கள் அனைத்திலும் நல்ல வெற்றியைக் காண்பீர்கள்.
தொழில்-உத்யோகம்: கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்குவர். தற்காலிக இடமாற்றம் இருக்கும். இயந்திரங்கள், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் துறையினருக்கு முன்னேற்றம் இருக்கும். தொழில் ரீதியாக அடிக்கடி வெளியூர் பிரயாணங்கள் செல்ல நேரிடும். வெளிநாட்டுப் பயணத்திற்காகக் காத்திருப்போருக்கு நேரம் சாதகமாக உள்ளது. தொழிலில் செயல்வேகம் அதிகரிக்கும். புதிய நண்பர்களால் தொழில் அபிவிருத்தியாகும். வியாபாரிகள் எதிர்பார்க்கும் லாபத்தை அடைய காத்திருக்க வேண்டும். விடாமுயற்சியின் பேரில் வெற்றி தரும் வகையில் அமையும்.
பரிகாரம்: குருப்பெயர்ச்சி நாளன்று அருகிலுள்ள சிவாலயத்திற்கு சென்று குருபகவானை தரிசித்து சிறப்பு அர்ச்சனை செய்து கொள்வது நல்லது. நேரம் கிடைக்கும்போது குடும்பத்தினருடன் சிதம்பரம் சென்று நடராஜப்பெருமானை தரிசித்து பிரார்த்தனை செய்துகொள்வதன் மூலம் கூடுதல் நன்மை அடைவீர்கள்.
கடகம்
எடுத்த செயல்களில் நற்பலன்கள் கிடைக்கும். தன வரவு தடையின்றி இருக்கும். பொருளாதார நிலை உயரும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். எதிலும் நன்மை தீமையை ஆராய்ந்து செயலில் இறங்கினால் வெற்றி சாத்தியம். புத்திசாலித்தனம் அதிகரிக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். பேச்சில் இனிமை இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சதா கலகலப்பான சூழ்நிலை நிலவும். மாணவர்களின் கல்விநிலை சிறப்பாகும். எதிரிகளும் நண்பர்களாவர். உடல்நிலை நன்றாக இருக்கும். சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு உடல்நிலையில் கூடுதல் கவனம் அவசியம். கடன்பிரச்னைகள் முடிவிற்கு வரும். அநாவசிய செலவுகளை குறைத்து சேமிப்பில் ஈடுபடுவீர்கள். எதிர்கால நலன் கருதி சேமிப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லது. பூர்வீக சொத்துகளால் நல்ல ஆதாயம் உண்டு. பெற்றோர் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. தகப்பனார் வழி உறவு ஒன்று உங்களை தேடி வரும். சாதுக்கள், சந்யாசிகள், ஆன்மிகப் பெரியோர்களுடனான சந்திப்பு புத்துணர்ச்சியைத் தரும்.தொழில்-உத்யோகம்: தொழிலில் ஓய்வின்றி செயல்பட வேண்டி இருக்கும். வேலை பளு அதிகரிக்கும். திறமைைய வளர்த்து கொள்வீர்கள். சிறப்பான நிலையை எட்டுவீர்கள். அரசுப்பணிக்காக காத்திருப்போருக்கு சாதகமான நிலை உருவாகும். உத்யோகஸ்தர்கள் ஓரிடத்தில் நிலைபெறுவீர்கள். நேர்மை, நாணயத்தால் அலுவலகத்தில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவுடன், எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். உணவுதானிய வியாபாரம் அபிவிருத்தி அடையும். புதிய நுணுக்கங்கள் கைகொடுக்கும். சுயதொழில் செய்வோர் சீரான லாபம் பெறுவர். குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலனைத் தரும்.பரிகாரம்: திங்கள் தோறும் நாகாபரணத்துடன் கூடிய சிவபெருமானை தரிசிப்பது நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது திருவண்ணாமலை சென்று அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து நாகாபரணம் சாற்றி வழிபடுவதால் வேண்டிய வரங்களைப் பெறுவீர்கள்.
சிம்மம்

நியாயத்துக்கு மதிப்பளிப்பீர்கள். குறுக்கு வழிகளை புறக்கணித்து முன்னேற்றம் காண்பீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் தெளிவான முடிவெடுக்க இயலாது போகும். தர்ம சிந்தனைகளும், ஆன்மிக எண்ணங்களும் அதிகரிக்கும். தான தருமங்கள் செய்வீர்கள். கூடுதல் செலவால் கையிருப்பு கரையும். பூர்வீக சொத்துகள் அனுகூலம் தரும். தகப்பனார் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. மாணவர்கள் எதிர்பார்க்கும் பாடப்பிரிவில் இடம் பிடிக்க சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். ஆயினும் அவர்களின் கல்வித்தரம் உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் பிள்ளைப் பேறுக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் வாழ்வில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். குடும்பச் சூழ்நிலையால் பிள்ளைகளை பிரிந்து வாழும் பெற்றோர்கள் அவர்களுடன் இணைவர். வாழ்க்கைத்துணையுடன் இணைந்து செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்கள் சேருவர். தொலைதூரப் பிரயாணங்கள் உண்டு. வெளிநாடு செல்லக் காத்திருப்போருக்கு நேரம் சாதகமாக இருக்கும்.
தொழில்-உத்யோகம்: உழைப்பதற்கு அஞ்சாத உங்களுக்கு இவ்வருடம் வரப்பிரசாதமாக இருக்கும். வாகனங்கள், மின் இயந்திரங்கள் போன்ற துறைகளில் பணியாற்றுபவர்கள் ஏறுமுகம் காண்பார்கள். உடன் பணிபுரிபவர்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் இருந்த மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். சுயதொழில் செய்பவர்களுக்கு கூடுதலான அலைச்சல் இருக்கும். தொழிலில் நல்ல பெயர் கிடைத்தாலும் எதிர்பார்க்கும் தனலாபம் குறையும். ஆனால் கூட்டுத்தொழில் நல்ல லாபம் தரும். தொழில் செய்வோர் மற்றும் உத்யோகஸ்தர்கள் நிறைய அனுபவ பாடங்களை கற்று முன்னேற்றப்பாதையில் பயணிக்க துவங்குவர்.
பரிகாரம் : வருகின்ற ஒரு வருட காலத்திற்கு பிரதி வியாழன் தோறும் கொண்டைகடலை தானியத்தைப் பரப்பி அதன் மீது மூன்று நெய் விளக்குகளை வடக்குமுகமாக ஏற்றி வைத்து குருவிற்குரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபட்டு வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவரை சிறப்பு பூஜைகளுடன் தரிசித்து வர நன்மை உண்டாகும்.
கன்னி

நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாது. நினைத்த காரியத்தில் வெற்றி பெற கூடுதல் அலைச்சல் ஏற்படும். பொருளாதார சிக்கல் உருவாகும். செலவுகள் அதிகரிக்கும். வரவிலும் உயர்வு இருக்காது. செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். குடும்பப் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும். நண்பர்களால் நஷ்டம் ஏற்படும். ஜாமீன் பொறுப்புகளை தவிர்க்கவும். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள். மாணவர்களின் கல்வித்தரம் சிறக்கும். உயர்கல்வி மாணவர்களுக்கு நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்காது போனாலும் எதிர்பார்த்த பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். குடியிருக்கும் வீட்டில் மாற்றங்கள் செய்வீர்கள். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். தாயார் வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. உடல்நிலையில் பெரிய பிரச்னைகள் ஏதும் வராது. ஆனால் சர்க்கரை வியாதிக்காரர்கள், தீராத நோயால் சிரமப்படுபவர்களுக்கு உடல்நலத்தில் கூடுதல் கவனம் அவசியம். கடன்பிரச்னைகள் குறையும். எதிரிகள் நண்பர்களாவர். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் அக்கறை தேவை.
தொழில்-உத்யோகம்: பணிகளை உடன்பணிபுரிவோர் துணையுடன் சாதித்துக்கொள்வீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். எதிர்பாராத பயணம் இருக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரிகளுக்கு அதிக அலைச்சல் இருந்தாலும் தன லாபம் இருக்கும். மளிகை பலசரக்கு வியாபாரிகள் ஏற்றம் காண்பார்கள். வியாபாரிகள் எதிர்பார்க்கும் லாபத்தினை உடனுக்குடன் காண்பது சிரமம் என்பதால் அவசரப்பட்டு அதிக முதலீட்டில் ஈடுபடாது நிதானமாக செயல்படுவது நல்லது. பொதுவாக இந்தக் குருப்பெயர்ச்சி போராட்டத்தின் பேரில் வெற்றி காணும் வகையில் இருக்கும்.
பரிகாரம் : பிரதி ஏகாதசி நாளன்று விரதம் இருந்து பெருமாளை தரிசித்த பின்பு உணவருந்துவது நல்லது. நேரம் கிடைக்கும்போது குடும்பத்தினருடன் திருப்பதி சென்று வேங்கடேசப் பெருமாளை தரிசித்து வர நினைத்த காரியங்கள் கைகூடுவதோடு வாழ்க்தை தரம் முன்னேற்றம் அடையும்.

எடுத்த காரியங்கள் நியாயமான வெற்றியை பதிவு செய்யும். நினைத்த காரியங்கள் நல்லபடியாக நடைபெறும். எதிலும் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். இதுநாள் வரை சிரமத்தினை சந்தித்து வந்த நீங்கள் அதற்கான லாபத்தை அடைய உள்ளீர்கள். உண்மையாக உழைத்ததற்கான பலன் தற்போது கிட்டும். நினைத்தது ஜெயமாகும். தனலாபம், ஸ்தான லாபமும் உண்டாகும். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் கிட்டும். உங்களது முயற்சிகளும், செயல்களும் மற்றவர்களுக்கு உதவும். மதிப்பும், மரியாதையும் உயரும். திருமணம் உடனடியாக நடக்கும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு அதற்கான வாய்ப்பு உருவாகும். பிள்ளைகளின் வாழ்க்கை தரம் உயரும். அவர்களின் எதிர்காலத்திற்காக சொத்து சேமிப்பீர்கள். சுறுசுறுப்பு அதிகரிக்கும். உடன்பிறந்த சகோதரர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். தகவல் தொடர்பு சாதனங்களால் பணிகள் எளிதாகும். நட்பு வட்டம் விரிவடையும். பூர்வீக சொத்துகளில் பாகப்பிரிவினை பிரச்னைகள் சுமுக முடிவுக்கு வரும். குடும்பத்தில் இருந்த சலசலப்பு நீங்கி கலகலப்பான சூழல் உருவாகும்.
தொழில்-உத்யோகம்: கலைத்துறையில் இருப்பவர்கள் சிறப்பான நிலையை அடைவார்கள். அலுவலகத்தில் உங்களது நிர்வாகத்திறமை வெளிப்படும் அதே நேரத்தில் மேலதிகாரிகளிடமும் ஒத்துப்போவது நல்லது. எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு கிட்டும். பொன், வெள்ளி போன்ற ஆபரணத்தொழில் செய்பவர்கள் நல்ல தன லாபத்தினை அடைவார்கள். வங்கி, இன்சூரன்ஸ் துறையினருக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. தொழிலில் உள்ள கடன்பாக்கிகளை நிலுவையில் வைத்துக்கொள்வதை தவிர்க்கவும். மொத்தத்தில் இந்த குருபெயர்ச்சி உங்கள் ராசிக்கு சிறப்பான நற்பலன்களைத் தரும் வகையில் அமைந்துள்ளது.
பரிகாரம்: பிரதி வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் துர்கைக்கு தொடர்ந்து எலுமிச்சை விளக்கேற்றி வருவதால் சிரமங்கள் குறையும். நேரம் கிடைக்கும் போது பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் சென்று மதுரகாளியம்மனை தரிசித்து குங்குமார்ச்சனை செய்துகொள்வதும், அம்மனின் அருட்பிரசாதமான குங்குமத்தினை தினமும் நெற்றியில் இட்டுக்கொள்வதும் நல்லது

சங்கடங்களை சமாளித்து நற்பெயர் வாங்குவீர்கள். தொழிலில் அலைச்சல் இருக்குமேயன்றி பதவி பறிபோகாது. உழைப்பால் நற்பெயரும் புகழும் கிடைக்கும். தன லாபம் தாமதமாகும். சேமிப்பு உயர துவங்கும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் வார்த்தைகள் மதிப்பு பெறும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முனைப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தோரால் இழப்புகள் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கும் நீங்கள் அவர்களது உடல்நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. வாழக்கைத்துணையுடன் இணைந்து செயல்பட்டு எதிர்கால திட்டங்களில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வாழ்க்கை தரம் உயரும். வீடு, வாகனம், மனை வாங்குவீர்கள். திட்டமிட்டு செயல்படும் விஷயங்களில் வெற்றி கிடைக்கும். குடியிருக்கும் வீட்டில் மாற்றங்கள் செய்வீர்கள். மாணவர்களின் கல்வித் தரம் உயரும். உயர்கல்வி மாணவர்களுக்கு விரும்பிய படிப்புகளில் இடம் கிடைக்கும். கடன்பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிரிகள் காணாமல் போவார்கள். உடல்நிலை சீராகும்.
தொழில்-உத்யோகம்: உடன்பணிபுரிவோருடன் ஒத்துப்போவது அவசியம். சுயதொழிலில் எதிர்பார்த்த ஆர்டர், லாபம் கிடைக்க பொறுமை அவசியம். உத்யோகஸ்தர்களுக்கு தற்காலிக இடமாற்றத்துடன் கூடிய பதவி உயர்வு உண்டாகும். கூட்டுத்தொழிலில் உள்ளவர்கள் சங்கடங்களை சந்திக்க நேரும். வியாபாரிகள் வெளியில் இருந்து வர வேண்டிய கடன் பாக்கிகளை நிலுவையில் வைக்காமல் உடனுக்குடன் வசூலிப்பது நல்லது. தொழிலில் புதிய முயற்சிகள் வருடத்தின் இறுதியில் வெற்றி தரும். மொத்தத்தில் ஜென்மச் சனியால் சிரமத்தினைக் கண்டு வரும் உங்களை இந்த குருப்பெயர்ச்சி முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும்.
பரிகாரம்: பிரதி செவ்வாய் தோறும் துவரை தானியத்தைப் பரப்பி அதன் மீது ஆறு அகல் விளக்குகளை ஏற்றி வைத்து சுப்ரமணிய ஸ்வாமியை மானசீகமாக வழிபட்டு வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது அறுபடைவீடுகளுக்கும் சென்று வருவது நன்மை தரும்.

சிரமங்கள் நீங்கி நற்பலன்கள் ஏற்படும். மனதில் தர்ம சிந்தனைகள் அதிகரிக்கும். நியாயத்திற்குப் புறம்பான விஷயங்களை எதிப்பீர்கள். தன்னம்பிக்கையோடு எல்லா விஷயங்களையும் எதிர்கொள்வீர்கள். முழு ஈடுபாட்டோடு நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி கிட்டும். மனதில் நல்லெண்ணங்களும், நற்சிந்தனைகளும் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எண்ணிய காரியங்கள் நடைபெறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். திருமணத்தடையை சந்தித்து வந்தவர்களுக்கு தடைகள் விலகி விரைவில் திருமணம் நடக்கும். குழந்தைப் பேறுக்காகக் காத்திருப்போருக்கு சாதகமான நேரம் இது. பிள்ளைகளின் வாழ்க்கை தரம் உயரும். அவர்களின் செயல்கள் குடும்பத்தின் பாரம்பரிய மதிப்பையும், மரியாதையையும் உயர்த்தும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவர். தம்பதிகளுக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னைகள் அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். ஆன்மிகப் பயணங்கள் செல்வீர்கள்.
தொழில்-உத்யோகம்: உத்யோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்பு இருக்கும். எதிர்பார்த்துக் காத்திருந்த இடமாற்றமும் உண்டு. சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டு. உத்யோகஸ்தர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் இருக்கும். உணவு பண்ட வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும். கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்வோரருக்குமிகுந்த கவனம் தேவை. ஜவுளி வியாபாரிகளுக்கு அலைச்சல் அதிகரித்தாலும் நல்ல முன்னேற்றம் உண்டு. இந்த குருப்பெயர்ச்சி அதிக தனலாபம் தராவிட்டாலும், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி நற்பெயரையும், புகழையும் பெற்றுத் தரும்.
பரிகாரம் : முக்கியமான பணிகளில் ஈடுபடுவதற்கு முன்னால் விநாயகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்று சிதறுதேங்காய் உடைத்துவிட்டு காரியத்தைத் துவக்குவது நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது பிள்ளையார்பட்டி சென்று கற்பக விநாயகரை தரிசிப்பதால் நலம் பெறுவீர்கள்.

ஜனன ஜாதக ரீதியாக நல்ல தசாபுக்தி நடைபெறுபவர்களுக்கு பிரச்னை ஏதும் இருக்காது. அசட்டையாக இறங்கிய செயல்களில் முழுமையான வெற்றி கிடைக்காமல் போகும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடியிருக்கும் வீட்டில் மாற்றங்கள் செய்வீர்கள். அதனால் செலவுகள் அதிகரிக்கும். மனதிற்குப் பிடிக்காத சம்பவங்கள் நடைபெறும். எதையும் திட்டமிட்டு செயல்பட இயலாது போகும். மன வருத்தம் அதிகரிக்கும். மனக்கஷ்டம் இருந்தாலும், பணக்கஷ்டம் இருக்காது. பொருளாதார சிக்கல் இருக்காது. குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பீர்கள். பேச்சில் நியாயம் இருக்கும். வாழ்க்கை தரம் உயரும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை அதிக விலையானாலும் அசராது வாங்குவீர்கள். மாணவர்களின் கல்வி நிலை உயரும். நல்ல மதிப்பெண்கள் பெற்று எதிர்பார்க்கும் பாடப்பிரிவில் இடம் கிடைக்க பெறுவார்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி செயல்படுத்தும் திட்டங்கள் வெற்றி பெறும்.
தொழில்-உத்யோகம்: அரசுத்துறையில் பணி புரிபவர்களுக்கு திடீர் இடமாற்றம் இருக்கும். அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும். சுயதொழில் செய்வோர் பணியாட்களின்றி தாங்களே எல்லா வேலையையும் செய்ய வேண்டியிருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு தற்காலிக இடமாற்றம் இருக்கும். விவசாயிகள், ஓட்டல் துறையினர். சிறுதொழில் செய்வோர், காய்கறி வியாபாரிகளுக்கு சிறப்பான தனலாபம் உண்டு. ஜனவரி மாதத்திற்குப் பிறகு வியாபாரிகள் புதிய முயற்சியில் ஈடுபட வாய்ப்புகள் உருவாகும். தனிப்பட்ட முறையில் எந்த ஒரு விஷயத்திலும் ஸ்திரத்தன்மையற்ற நிலையை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ள குருபகவான் தோற்றுவிப்பார்.
பரிகாரம் : குருபகவானின் அஷ்டமத்துச் சஞ்சாரம் சிரமத்தினைத் தரும் என்பதால் ஒரு வருட காலத்திற்கு பிரதி வியாழன் தோறும் விரதம் இருந்து வடக்கு முகமாக நெய் விளக்கேற்றி வழிபட்டு வரவேண்டும். நேரம் கிடைக்கும்போது குடும்பத்தினருடன் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்று அம்பிகையை தரிசிப்பதால் சிரமங்கள் விலகி நன்மை காண்பீர்கள்.

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு நிம்மதி தரும். “குரு பார்க்க கோடி நன்மை” என்பதற்கேற்ப தடைபட்டிருந்த ஆசைகளும், விருப்பங்களும் நிறைவேறும். பல்வேறு புதிய விஷயங்களை அறிந்துகொள்வீர்கள். வாழ்க்கை தரம் உயரும். எந்த ஒரு விஷயத்திலும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிரமங்கள் வெகுவாக குறையும். மன உறுதி, தைரியம் கூடும். தனித்திறமைகள் வெளிப்படும். உடன்பிறந்தோர் உதவிகரமாக இருப்பர். தம்பதிகளுக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மிகுந்த பயன் தரும். கற்பனைத்திறன் அதிகரிக்கும். நினைப்பதை உடனடியாக செயல்படுத்துவீர்கள். மாணவர்களின் கல்வித்தரம் உயரும். நல்ல மதிப்பெண்கள் ெபற்று உயர்கல்வியில் நினைத்த பாடப்பிரிவில் இடம் பெறுவீர்கள். வீடு, மனை போன்ற அசையா சொத்துகள் வாங்குவீர்கள். திருமணத்தடை விலகும். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறத் துவங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும்.
தொழில்-உத்யோகம்: தொழிலில் நீங்களாக விரும்பினாலொழிய ஓய்வு எடுத்துக்கொள்ள இயலாது. உழைப்பிற்கேற்ற ஊதியமும் நல்ல தனலாபமும் இருக்கும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்குவர். பணிச்சுமை கூடும். அரசியல்வாதிகள், நகை அடகு வட்டிக்கடை நடத்துபவர்கள், மருத்துவத் துறையில் பணிபுரிபவர்களுக்கு பொற்காலமாக இருக்கும். சுயதொழில் செய்வோருக்கு சிறப்பான தனலாபம் கிட்டும். இதுநாள் வரை எண்ணியிருந்த தொழில் லட்சியங்கள் நிறைவேறி சிறப்பான வெற்றி காண்பீர்கள். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு சிறப்பான நற்பலன்களைத் தர உள்ளது.
பரிகாரம் : இந்த குருப்பெயர்ச்சி பாதகம் எதையும் ஏற்படுத்தாது என்பதால் சிறப்புப் பரிகாரம் தேவையில்லை. கிருஷ்ணரை வணங்கி நேரம் கிடைக்கும்போது புண்ணியநதிகளில் ஸ்நானம் செய்து முன்னோர்களுக்கான கடமையை சரிவர செய்து முடிப்பது நல்லது. இல்லத்தில் அமாவாசை தோறும் தவறாது முன்னோர் வழிபாடு செய்து ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யவும். குலதெய்வ வழிபாடு மன நிம்மதி தரும்.

எடுத்த செயல்களில் நன்மை கண்டு வந்த நீங்கள் சற்று சங்கடத்தை சந்திக்க உள்ளீர்கள். சகட யோக குருவின் ஆறாம் இடத்து சஞ்சாரம் இறங்கிய காரியங்களில் தடங்கல்களை ஏற்படுத்தும். எந்த ஒரு விஷயமும் எளிதில் முடிவடையாது இழுபறி தரும். மன சஞ்சலம் இருக்கும். பொருளாதார நிலையில் பிரச்னை ஏதுமின்றி தனவரவு தொடர்ந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பேச்சில் இனிமை இருக்கும். ஆத்ம, ஆன்மிக ஞானம் அதிகரிக்கும். அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் திறன் வளரும். உங்களது பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். தம்பதியரிடையே இருந்த கசப்பு நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். அதிகப்படியான உழைப்பால் அவ்வப்போது உடல் அசதி ஏற்படும். மாணவர்களை பொறுத்த வரை படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதும், படித்தவற்றை எழுதிப்பார்ப்பதும் கூடுதல் நலம் பயக்கும். சயன சுக ஸ்தானத்தின் மீதான குருபகவானின் பார்வை இரவில் நிம்மதியான உறக்கம் தரும்.
தொழில்-உத்யோகம்: உத்யோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் தடங்கல் இருக்காது. உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வோடு விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு இன்றி கூடுதல் பணிச்சுமை ஏற்படும். வெளிநாட்டு உத்யோகத்திற்கு காத்திருப்பவர்களுக்கு சாதகமான தகவல்கள் வந்து சேரும். ஆடிட்டிங், வங்கி, இன்சூரன்ஸ் துறைகளில் பணிபுரிபவர்களும், உணவுப் பொருட்கள் வியாபாரம் செய்பவர்களும் சிறப்பான முன்னேற்றம் அடைவர். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி அதிர்ஷ்ட வாய்ப்புகளை குறைத்தாலும், தன்முயற்சியால் வெற்றிகாண வழிவகை செய்யும்.
பரிகாரம்: வேம்புடன் கூடிய அரசமரத்திற்கு பிரதி திங்கட்கிழமை தோறும் நீருற்றி பூஜை செய்து வருவது நல்லது. வேதம் பயிலும் மாணவர்களுக்கு வஸ்திர தானம் செய்வதால் குரு பகவானின் திருவருளுக்குப் பாத்திரமாவீர்கள். நேரம் கிடைக்கும்போது ராமேஸ்வரம் சென்று 21 தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்து ராமநாத ஸ்வாமியை தரிசனம் செய்ய நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெறும்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக