வியாழன், 6 ஆகஸ்ட், 2015

கிழக்கு பல்கலைகழகத்தில் நடைபெற்ற தேசிய விவசாய ஆராச்சி மாநாடு(Photos)

‘உணவு தன்னிறைவுக்கான சவால்களும் வாய்ப்புக்களும்’ என்ற தொனிப்பொருளில் கிழக்கு பல்கலைகழகத்தில் நடைபெற்ற தேசிய விவசாய ஆராச்சி மாநாடு (8) புதன்கிழமை கிழக்கு பல்கலைகழக விவசாய பீடாதிபதி பி.சிவராசா அவர்களின் தலைமையில் நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.
நடைபெற்ற ஆராச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் அழைக்கப்பட்டு மங்கள விளங்கேற்றப்பட்டதும் மாநாடு தொடர்பான அறிமுக உரையை கலாநிதி எஸ்.சுதர்சன் நிகழ்த்தினார்.
இந் நிகழ்வுக்கு விசேட அதிதியாக கிழக்கு பல்கலைகழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் உமா குமாரசுவாமி, கௌரவ அதிதி பேராதனிய பல்கலைகழக பேராசிரியர் எ.என்.எப்.பேரேரா, பேராதனிய பல்கலைகழக விவசாய துறை ஆராச்சி மேலதிக பொது பணிப்பாளர் கலாநிதி WMADB விக்கிரமசிங்க மற்றும் கிழக்கு பல்கலைகழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
‘உணவு தன்னிறைவுக்கான சவால்களும் வாய்ப்புக்களும்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற தேசிய விவசாய ஆராச்சி மாநாடு அரங்கு நிகழ்வின் விசேட உரையை பேராதனிய பல்கலைகழக பேராசிரியர் எ.என்.எப்.பேரேரா, பேராதனிய பல்கலைகழக விவசாய துறை ஆராச்சி மேலதிக பொது பணிப்பாளர் கலாநிதி WMADB விக்கிரமசிங்க நிகழ்த்தினார்.
நடைபெற்ற நிகழ்வில் ஆராச்சி மாநாட்டுக்கு வருகைதந்த அதிதிகளுக்கு மாநாட்டு புத்தகம் மற்றும் நினைவுச் சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
1 (2)
 
1 (5)
1 (12)
1 (16)
1 (19)
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate