திங்கள், 3 ஆகஸ்ட், 2015

வெல்லாவெளியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 40ஆம்கொலணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

40ஆம் கொலணி,வம்மியடியூற்று நான்காம் வட்டாரத்தில் உத்தமபுத்திரன் நந்தினி(26வயது)ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதி கிராம சேவையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

இன்று காலை தனது வீட்டின் ஒரு அறையிலேயே குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate