மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிள்ளையாரடியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த பெண்ணின் கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிள்ளையாரடியில் உள்ள குறித்த பெண்ணின் வீட்டின் அறையினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.26வயதுடைய சு.உதயராணி என்னும் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பெண்ணின் உடம்பில் காயங்கள் காணப்பட்டதன் காரணமாக குறித்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிள்ளையாரடியில் உள்ள குறித்த பெண்ணின் வீட்டின் அறையினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.26வயதுடைய சு.உதயராணி என்னும் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பெண்ணின் உடம்பில் காயங்கள் காணப்பட்டதன் காரணமாக குறித்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர் பூசகர் ஒருவர் எனவும் இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக