திங்கள், 3 ஆகஸ்ட், 2015

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மற்றுமொரு பிரமாண்ட பிரச்சாரக் கூட்டம்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எற்பாடு செய்திருந்த எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலான மாபெரும் பிரச்சாரக் கூட்டம் ஒன்று நேற்று காத்தான்குடி முஹ்ஸின் மௌலானா சதுக்கத்தில் இடம்பெற்றது.


காத்தான்குடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் அல்ஹாஜ எஸ்.எம்.எம். காசீம் தலைமையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயற்குழு உறுப்பினர் சகோ, முஹம்மத் பாயிஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இப்பிரச்சாரக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க்,எம்.வி.எம்..பிர்தௌஸ் (நளீமி), வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவசபை உறுப்பினர்களான பொறியியலாளர் எம்.எம்..பழுலுல் ஹக் மௌலவி முஹம்மது றிஸ்மி (காசிமி), கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட 5ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் சிப்லி பாறூக், காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன், அதன் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர்களான மர்சூக் அஹமது லெப்பை, இல்மி அஹமது லெப்பை, ஐ.தே.க. காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர் கையூம் ஆசிரியர் உள்ளிட்ட கட்சிகளின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இப்பிரச்சாரப் கூட்டத்தின்போது ஏறாவூர், காத்தான்குடி, பூநொச்சிமுனை, காங்கேயனோடை, ஒல்லிக்குளம் உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், சமூக, சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்கள் பலரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கான இணைவினை மேடையில் வெளிப்படுத்தினர்.








































Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate